வரலாற்றுக்காலம்
பிற்காலப் பாண்டியர் காலம்
கூடுதல் விவரங்கள்
சாலையை ஒட்டி அமைந்துள்ள வயல்வெளியில், ஒரு தனிப்பாறையில் இந்தக் குறியீடு காணப்படுகிறது. குறியீட்டைக் கல்லில் செதுக்கியபின் அதன் மேல் சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இப்பாறையில், குறுக்கே செல்லும் இரண்டு கோடுகளும், அதைச் சுற்றி ஒரு வட்டம் மற்றும் அதன் மேல் அம்புக் குறியும் செதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தனிப்பாறை, பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் இது நில வரம்பைச் சுட்டிக்காட்டும் ஒரு எல்லைக்கல்லாக இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
ஊர்
சக்கரப்ப நாயக்கனூர்
மாவட்டம்
மதுரை