Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

ஹஜ்ரத் சையத் வருசை இப்ராஹீம் ஷாஹிப் ஒலியுள்ளா தர்கா

Hazrat Syed Varusai Ibrahim Shahib Waliullah Dargah

அமைவிடம்

ஊரின் வடக்கு பகுதியில் உள்ளது.


வேறு பெயர்கள்

கணவாய் தர்கா


வகை

தர்கா


ஊர்

மேலக்கால்

மாவட்டம்

மதுரை

வழிபாட்டு முறை
ஐந்து நேர தொழுகையும், ஓதுதலும் நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
அக்டோபர் மாதத்தில் ஒரு நாள், சந்தல் உரூஸ் எனும் சந்தனக்கூடு விழா என்னும் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவின் போது கொடியேற்றம் மற்றும் கொடியிறக்கம் நடைபெறுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
வரலாறு / கதை
இத்தர்காவில் வழிபடப்படும் இப்ராஹிம் என்பவரை ஒரு சமயம் ஆங்கிலேயர்கள் விரட்டி வரும் பொழுது, அவர் இறைவனிடம் உதவி கேட்டதாகவும் இறைவன் அங்கிருந்த மலையை இரண்டாகப் பிளந்து அதனுள் இப்ராஹிம் சென்ற பின் மலை மூடியதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பொழுது ஆங்கிலேயர்கள் இப்ராஹீமை கண்டுபிடிக்க இயலாமல் திரும்பி சென்றுவிடுகின்றனர். பின்னர் இப்ராஹிம் குதிரை வடிவில் தோன்றி பிச்சை என்பவர் வீட்டிற்கு சென்று அவரது சட்டையினை பிடித்து இழுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின் பிச்சையும், அக்குதிரை தன்னிடம் ஏதோ சொல்ல நினைப்பதாக எண்ணி, அக்குதிரையை பின் தொடர்ந்து சென்றார். அப்போது குதிரை வடிவில் இருந்த இப்ராஹிம் சென்று நின்ற இவ்விடத்தை புனிதமானதாக கருதி பொதுமக்கள் வழிபடத் தொடங்கினர் என்றும் சொல்லப்படுகிறது.
அமைப்பு
இத்தர்காவில் ஹஜ்ரத் சையத் வருசை இப்ராஹீம் ஷாஹிப் ஒலியுள்ளா அவர்களின் சமாதி அமைந்துள்ளது. தர்காவின் நுழைவாயிலில் வளைவு வடிவ (ஆர்ச்) அலங்காரங்களும், மினார்களும் குவிமட அமைப்பும் காணப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
இத்தர்காவில் வழிபடுவோரின் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இங்கு பேய் ஓட்டுவது மற்றும் சூனியம் எடுப்பது போன்ற சடங்குகள் நடைபெறுகின்றன. உடல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் பிற துயரங்களினால் துன்பப்படுபவர்கள் இங்கு வந்து தங்குவதாக சொல்லப்படுகிறது. தெய்வம் இவர்களது கனவில் தோன்றி, எத்தனை நாட்கள் இவ்விடத்தில் தங்கி வழிபட வேண்டும் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. அதன்படியே அவர்களும் இவ்விடத்தில் தங்கி முழுமையாக குணமடைவதாகவும் சொல்லப்படுகிறது. குணமடைந்து சென்றவர்கள் பின்னர் தர்காவிற்கு திரும்ப வந்து சேவல் அருத்து பலி கொடுத்து, அரிசி மாவு ரொட்டி சமைத்து கொடுத்து வழிபடுவதாகவும் கூறுகின்றனர்.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

செல்லும் வழி
செக்கானூரணிக்கு அருகில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலக்கால் பேருந்து நிறுத்தம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
சோழவந்தான் தொடர் வண்டி நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
புகைப்படங்கள்

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

கேட்பொலி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி