Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மரவேலைப்பாடு தொழில்

Woodworking Industry

வகை

மரச் சிற்பம்


கைவினைப் பொருளின் பெயர்

தலைவாசல் கதவுகள் மற்றும் மரச்சிற்பங்கள்


கைவினைக் கலைஞர் பெயர்

M. காளியப்பன்


பயன்பாடுகள்

வீடுகளில் பிரதான நுழைவாயிலில் வைக்கப்படும் மரத்தாலான கதவுகள் மற்றும் மரச்சிற்பங்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.


ஊர்

ஆரப்பாளையம்

மாவட்டம்

மதுரை

காட்சிப்படுத்தப்படும் இடம்
வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஆரப்பாளையம் என்ற இடத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
மரவேலைப்பாடு என்பது மரத் துண்டுகளை வெட்டுவது, துளைப்பது, செதுக்குவது, வளைப்பது மற்றும் அழகிய வடிவங்களை உருவாக்குவதாகும். வீடுகளில் பிரதான நுழைவாயிலில் வைக்கப்படும் தலைவாசல் கதவுகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக வீடுகளில் வைக்கப்படும் முதன்மையான தலைவாசல் கதவுகளில் மிகுந்த வேலைப்பாடு காணப்படும். அவற்றில் அழகான வடிவியல் வடிவங்களும், தெய்வங்களின் புடைப்பு சிற்பங்களும், பித்தளை வேலைப்பாடுகளும், அலங்கார வேலைபாடுகளும் செய்யப்படுகின்றன. மேலும் நாக படம், யானை சிற்பம், மயில் சிற்பம், குத்து விளக்கு, அன்னப்பச்சி மற்றும் பிற புடைப்புச் சிற்பங்களையும் இவர்கள் மரத்தில் மிக நேர்த்தியாகச் செதுக்குகின்றனர்.

தமிழகத்தில் மதுரை, விருதுநகர், தேவகோட்டை, காரைக்குடி, நாகர்கோயில், சுசீந்திரம் ஆகிய பகுதிகளில் மரவேலைப்பாடுகள் அதிகம் செய்யப்படுகின்றன. தோதகத்தி எனப்படும் ரோஸ்வுட் மரம் மற்றும் பிற உள்ளூர் மரங்களைக் கொண்டு மரச்சட்டங்கள், சிலைகள், பொம்மைkஅள், அறைகலன்கள், வீட்டு உபகரணங்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. ஆரப்பாளையம் என்ற இப்பகுதியில் மரவேலைப்பாடுகள் மட்டுமல்லாமல், குடிசைத் தொழிலாக களிமண் சிற்பங்களும் மற்றும் மண்பாண்டங்களும் தயாரிக்கப்படுகின்றன.
தொழில் முறை
குடிசைத் தொழில்
தகவல்

முனைவர் மகாலிங்கம்

புகைப்படங்கள்

M. ராஜேஸ்வரி, M. காளியப்பன்

M. ராஜேஸ்வரி, M. காளியப்பன்

M. ராஜேஸ்வரி, M. காளியப்பன்

M. ராஜேஸ்வரி, M. காளியப்பன்

M. ராஜேஸ்வரி, M. காளியப்பன்

M. ராஜேஸ்வரி, M. காளியப்பன்

M. ராஜேஸ்வரி, M. காளியப்பன்