பொது ஆண்டு 1934ஆம் ஆண்டில் தல்லாக்குளம் திருச்சபை, மதுரை வைகை ஆற்றுக்கு வடபுறத்தில், ’அமெரிக்கன் அருட்பணி இயக்கத்தினால்’ நிறுவப்பட்டது. பொது ஆண்டு 1986ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அமெரிக்கன் கல்லூரி சிற்றாலயத்தில் ஞாயிறுதோறும் காலையில் இரண்டு ஆராதனைகள் நடைபெற்றன. தல்லாக்குளம் திருச்சபைக்கு என்று தனியாக ஆலயம் இல்லை. 30.03.1986-அன்று இந்தப் பேராலயம் தல்லாக்குளத்தில் திறக்கப்பட்டது.
தேவாலயத்தின் அமைப்பு
பேராலயம் நான்கு ஏக்கர் (1.62 எக்டேர்) நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இப்பேராலயக் கட்டட அமைப்பு ஆழ்ந்த இறையியல் கருத்துகளைக் கொண்டது. திருமறையின் அடிப்படைப் போதனையும், இறையியலும், முன்னாள் கிழக்கு ஜெர்மானிய மக்களின் சிற்பக்கலை, கட்டடக் கலையான "கோத்திக்" கட்டடக்கலையும், தமிழ்ப் பண்பாடும் ஒரு சேர இணைந்து அழகாக உயர்ந்து காணப்படுகிறது. 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
Period/ Collector
1986 CE
Temple History / Stories
The Thallakkulam congregation was established in the year 1934, on the northern banks of the Vaigai River in Madurai, by the American Missionary Movement. Until the year 1986, two worship services were conducted every Sunday morning at the American College Chapel. The Thallakkulam congregation did not have its own dedicated church until then. On March 30, 1986, this grand church was opened at Thallakkulam.
Organization of the Church
The cathedral is situated on a four-acre (1.62-hectare) plot of land. The architectural structure of the church is deeply rooted in theological concepts. The foundation of the Holy Scripture, theology, the sculptural art of the former East German people, the Gothic architectural style, and Tamil culture all come together beautifully to create an elevated and harmonious design. It was started in 1976 and completed over the span of seven years.
Summary
An indication that Christianity is integrated with Indian culture is the placing of the cross on a lotus.