Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சி.எஸ்.ஐ. இம்மானுவேல் தேவாலயம்

C.S.I. Immanuel Church

தேவாலயத்தின் வகை

தென்னிந்தியத் திருச்சபை (Church of South India)


வேறு பெயர்கள்

ஆலடிப்பட்டி குருசேகரம் தேவாலயம்


அமைவிடம்

ஆலடிப்பட்டி


ஊர்

ஆலடிப்பட்டி

மாவட்டம்

விருதுநகர்

ஆலயத்தின் சிறப்பு
இந்தத் தேவாலயம் விருதுநகர் மாவட்டத்தின் மிகப் பழைமையான தேவாலயங்களில் ஒன்று. இத்தேவாலயம் கட்டப்பட்டு 138 ஆண்டுகள் ஆகின்றன.
வழிபாடு
உபவாசம், கூட்டு வழிபாடு, சிறப்பு ஆராதனை, சிறப்புத் திருப்பலி உள்ளிட்ட வழிபாட்டு முறைகள் இங்குக் கடைப்பிடிக்கப்படுகின்றன
வழிபாட்டுக் காலம்
ஆங்கில மாதத்தின் முதல் நாள் காலை 4.30 மணிக்குத் திருவிருந்து ஆராதனை, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறு காலை 7:30 மணிக்குத் திருவிருந்து ஆராதனை, ஞாயிறுதோறும் காலை 10 மணிக்குச் சிறுவர்களுக்கான ஞாயிறு கிறித்துவக் கல்வி, ஞாயிறு நண்பகல் 12 மணிக்கு ஜெப வளைய ஐக்கியம் (சங்கிலி ஜெபம்), மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை காலை 10 மணிக்கு உபவாசக் கூடுகை ஆகியவை நடைபெறும். மாதத்தின் நாலாவது வெள்ளி இரவு 8 மணி முன்னிரவு விழிப்பு ஜெபம் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 27ஆம் நாள் ஆலய ஆண்டுவிழா கொண்டாடப்படுகிறது. அன்று ஊர்ப் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். இது ஐக்கிய விருந்து என்று அழைக்கப்படுகிறது. அடுத்தபடியாகக் கிறிஸ்து பிறந்த கிறிஸ்துமஸ் நாளானது மிகக் கோலாகலமாக இங்குக் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. புனித வெள்ளி அன்று மக்கள் உபவாசம் இருந்து கிறிஸ்தவத்தை நினைவு கூறுகின்றனர்.

ஈஸ்டர் பண்டிகையன்று இயேசுவின் வாழ்க்கை வரலாறு நாடகமாக நடித்துக் காட்டப்படுகிறது. முக்கியமாக தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் தேவாலயத்தில் பொங்கல் வைத்து சிறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. தமிழரின் பாரம்பரியம் பண்பாடு ஆகியவைகள் அப்போது விவரிக்கப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
இந்தத் தேவாலயமானது 27. 5. 1886 அன்று அமெரிக்க ஐக்கிய மாகாணம் கான்நாடு கில்போர்ட் பட்டணத்து மிஷனரி ரேச்சல் சுமித் அம்மையார் அவர்களால் நிறுவப்பட்டது.
சுவரோவியம்
இயேசுவின் பிறப்பு மற்றும் அவரின் அருட்பணிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் சுவர் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
சிற்பங்கள்
குழந்தை இயேசு உருவத்துடன் மேரி மாதா சிலையும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சிற்பமும் உள்ளன.
ஆலய வரலாறு / கதைகள்
இந்தத் தேவாலயம் பொது ஆண்டு 1886ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய மாகாணம் கில்போர்ட் பட்டணத்து மிஷனரி, ரேச்சல் சுமித் அம்மையார் அவர்களால் கட்டப்பட்டது. தொடக்கத்தில் ஓட்டுக் கட்டடத்துடன் இருந்த இந்தத் தேவாலயமானது பின்னாளில் சிறிது சிறிதாகக் கல் கட்டடமாக மாற்றப்பட்டது. 27.05.2000 அன்று மற்றொரு கோபுரம் சிவகாசியைச் சேர்ந்த பேபி இந்திராணி செல்லத்துரை அவர்கள் நினைவாக விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும் மதுரை இராமநாதபுரம் திருமண்டலப் பேராயர் முனைவர் எட்வின் ஏசுராஜ் அவர்களால் இரண்டாவது முறையாகப் பொது ஆண்டு 2015ஆம் ஆண்டு தேவாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தேவாலயத்தின் அமைப்பு
இந்த தேவாலயத்தில் வளைவு வடிவமைப்புகளுடன் 2 கோபுரங்கள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இத்தேவாலயம் இப்பகுதிக்கு அருகில் உள்ள கல்லு மடம், கல்யாணசுந்தரம், உசிலம்பட்டி, வேலாவூரணி, பூமாலைப்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமாக உள்ளது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள பேருந்து நிலையம்
ரெட்டியபட்டி, தமிழ்ப்பாடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
புகைப்படங்கள்

ஜோஷ்வா

ஜோஷ்வா

ஜோஷ்வா

ஜோஷ்வா