தற்போது இந்த தேவாலயத்தில் வழிபாடுகள் அதிகம் நடைபெறுவதில்லை.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1898
கல்வெட்டு / செப்பேடு
இந்த தேவாலயத்தில் உள்ள கல்வெட்டில் 'மதுரை அமேரிக்கன் மிசன் கோயில் (ICP) 12.02.1898' என்று எழுதப்பட்டுள்ளது.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மதுரை அமேரிக்கன் மிஷன் என்பது தென்னிந்தியாவில் பொது ஆண்டு 1834 ஆம் ஆண்டில், ஏ.பி.சி.எஃப்.எம். (ABCFM) என்ற பிறநாடுகளுக்கு மறைப்பணியாளர்களை அனுப்பும் அமெரிக்க அமைப்பு மூலம் நிறுவப்பட்டது.
இந்த இயக்கம், பொது ஆண்டு 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் கல்வி, சுகாதாரம், மற்றும் கிறிஸ்தவ பிரசங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. இது அக்காலத்தில் மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிகள், தேவாலயங்கள் மற்றும் மருத்துவமனைகளை நிறுவி சமூக சேவையில் ஈடுபட்டது. இவ்வியக்கத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பணி செய்த மிஸ்ஸஸ் கேப்ரான் போன்றோர் பெண்கள் பள்ளிகளை நடத்தினர். அதன்மூலம் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும் சிலர் தனிநபர் வீடுகளுக்கே சென்ற பெண்களுக்கு மத போதனைகள் மற்றும் கல்வி ஆலோசனைகள் வழங்கினர்.
இந்த இயக்கத்தால் துவங்கப்பட்ட பள்ளிகளில் சில 'மதுரை அமெரிக்கன் காலேஜ்’ போல பெரிய கல்வி நிலையங்களாக வளர்ந்தன. இதைத் தவிர இவர்கள் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றையும் நிறுவினர். இந்த இயக்கம், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட குழுக்களுடன் தொடர்பு கொண்டு புதிய கிறிஸ்துவர் குழுக்களை உருவாக்கியது. இதன் செயல்பாடுகள் ABCFM ஆண்டு அறிக்கைகள், J. H. Chandler எழுதிய History of the ABCFM, மற்றும் Daniel Jeyaraj போன்ற ஆய்வுகளில் பதிவாகியுள்ளது.
தேவாலயத்தின் அமைப்பு
இந்த தேவாலயத்தில் பலிபீடம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. ஆனால் சிற்பங்கள் ஏதுமில்லை.
கூடுதல் விவரங்கள்
இந்தத் தென்னிந்திய திருச்சபை பொது ஆண்டு 1898 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. சில காலம் தேவாலயமாக செயல்பட்டு வந்த இத்தலம் தற்போது துவக்கப்பள்ளியாக இயங்கி வருகிறது.
சி.எஸ்.ஐ.பி.எஸ். என்று அழைக்கப்படும் இந்த தென்னிந்திய திருச்சபை துவக்கப்பள்ளி பொது ஆண்டு 1919இல் துவங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சேடப்பட்டி ஒன்றியத்தில் அரசு உதவியுடன் இயங்கி வரும் இந்த துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இங்கு சிறுவர்கள் மற்றும் சிறுமியர் இருவருக்கும் தமிழ் வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. பள்ளி தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Significance of Church
This is a church which is more than a hundred years old.
Worship period
At present there are not many worship services held in this church.
Period/ Collector
1898 CE
Inscription / Copper
The inscription in this church reads: ’Madurai American Mission Kovil (ICP) 12.02.1898.’
The Madurai American Mission mentioned in the inscription was established in 1834 CE in South India by the American Board of Commissioners for Foreign Missions (ABCFM), an American organization that sent missionaries abroad.
During the 19th and 20th centuries CE, this mission was actively involved in education, healthcare, and Christian/evangelical outreach. It established schools, churches, and hospitals in Madurai and the surrounding areas, contributing significantly to social service. Women missionaries, such as Mrs. Capron, ran girls’ schools, promoting women’s education, and some missionaries even visited individual homes to provide religious instruction and educational guidance.
Some of the schools started by this mission later developed into major educational institutions, such as the American College, Madurai. In addition, the mission established hospitals, clinics, and dispensaries. It also engaged with marginalized communities, forming a congregations for new Christians. The activities of the Madurai American Mission are documented in ABCFM Annual Reports, J. H. Chandler’s History of the ABCFM, and the research of Daniel Jeyaraj.
Organization of the Church
An altar-like structure is seen in this church. But there are no sculptures present.
Additional Information
The inscription engraved in this C.S.I. Church indicates that it may have been established in the year 1898 CE. The building, which functioned as a church for some time, is now operating as a primary school.
This Church of South India Primary school, known as C.S.I.P.S., is said to have been established in 1919 CE. The school functions in the Sedapatti area with the financial assistance from the government. The school offers classes from 1st to 5th standard. The school provides education to both boys and girls in the Tamil medium of instruction. It is noteworthy that the school has been in operation for over a hundred years.