Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

புரட்டாசிப் பொங்கல் திருவிழா

Puratāsi Pongal Festival

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

வேளாண்மை பெருகுகிறது. மக்களின் நோய் நீங்குகிறது. அனைத்துப் பிரிவினரும் ஒன்று திரள்கின்றனர்.


நடைபெறும் இடம்

சந்தைப்பட்டி முத்தாலம்மன் கோயில்


நடைபெறும் தருணங்கள்

புரட்டாசி மாதம் முதல் செவ்வாய் மற்றும் புதன் கிழமையில் நடைபெறும்.


ஊர்

சந்தைப்பட்டி

மாவட்டம்

மதுரை

பாலினம்
பெண்
நேர்த்திக்கடன்
ஒரு வாரம் காப்புக் கட்டி நோன்பு நோற்கின்றனர்
குறி சொல்லும் முறை
சாமி அருள் வாக்குச் சொல்வதும், பக்தர்கள் அவர் காலில் விழுந்து நல்வார்த்தைகள் கேட்பதுமுண்டு.
பொறுப்பாளர்
ஊர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
கொட்டு மேளம் நாயனம் உண்டு. பெண்கள் இரங்கிப் பாடுகின்றனர்.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
மதுரையின் மேற்குப் பகுதியான 8 நாடுகள் மற்றும் 24 உப கிராமங்களிலும் புரட்டாசிப் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி பிறந்த முதல் செவ்வாய் -புதனன்று இவ்விழா, கருமாத்தூரில் தொடங்கி வாலாந்தூர், சந்தைப்பட்டி, பெருங்காமநல்லூர் என்று ஒவ்வொரு ஊராகப் பரவிச் செல்கிறது. அம்மனை ஊரின் எல்லாச் சமூகங்களும் சேர்ந்து வழிபடுகின்றனர். இவ்விழாவில் முளைப்பாரி, பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏற்றுதல், கரகம் எடுத்தல், அம்மன் சிலை செய்தல், புரவி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இரண்டாம் நாளன்று அம்மன் சிலை ஒன்றைச் செய்து புரவியுடன் தூக்கிச் செல்கின்றனர்.
சிறப்பம்சங்கள்
அம்மனைத் தூக்கிக் கொண்டு கிராமம் முழுவதும் ஊர்வலம் வருகின்றனர்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்