Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

முடிமலை ஆண்டவர் கோயில் புரவி எடுத்தல் திருவிழா

Mudimalai Aandavar Temple Terracotta Horse Procession Festival

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

கிராம மக்களின் நலனுக்காகவும் மழை வரம் வேண்டியும் வருடா வருடம் இத்திருவிழா நடைபெறுகிறது.


நடைபெறும் இடம்

களத்துபட்டி முடிமலை ஆண்டவர் கோயில் மந்தையில் நடைபெறுகிறது.


நடைபெறும் தருணங்கள்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30 ஆம் தேதி திருவிழா நடைபெறும்.


ஊர்

களத்துப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

பாலினம்
பொது
விரத முறைகள்
விழாவையொட்டி காப்புகட்டி விரதம் இருக்கின்றனர்.
பலியிடல்
ஆடு மற்றும் சேவல் பலியிடப்படுகின்றன.
நேர்த்திக்கடன்
வேண்டுதல் நிறைவேறியதும் அம்பு, வேல், அருவாள், வெண்கலத்தில் குதிரை போன்றவற்றை செய்து கொடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர்.
குறி சொல்லும் முறை
திருவிழாவின் போது குறி சொல்லும் பழக்கம் உள்ளது.
பொறுப்பாளர்
ஊர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
கும்மிப்பாட்டு மற்றும் வைந்தானை குச்சி ஆட்டம் நிகழ்த்தப்படுகின்றன.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
பெரியூர்பட்டி முத்தாலம்மன் கோயிலில் குறி சொன்ன இடத்தில் இருந்து மண்ணை எடுத்து சென்று, முடிமலை ஆண்டவர் கோயில் மந்தையில் வைக்கின்றனர். அந்த மண்ணைக் கொண்டு புரவி (குதிரை சிலை) செய்து வழிபடுகின்றனர். மழை வரம் வேண்டி வருடா வருடம் மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது மக்கள் புரவி எனப்படும் குதிரை சிற்பங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். திருவிழா முடிந்த பிறகு அச்சிலை குழுமையில் பாதுகாப்பாக வைக்கப்படும். அங்கு ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
சிறப்பம்சங்கள்
திருவிழாவின் போது இரண்டு நாட்கள் ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

M. சேகர்

காணொலி

M. சேகர்