வயிற்றில் குழந்தையை சுமந்து பிரசவிக்க முடியாமல் இறந்து போன கர்ப்பிணிகள், குடும்ப பாரத்தை சுமந்து இறந்து போன குடும்ப உறவுகள் ஆகியோரின் நினைவாக சாலையோரங்களில் சுமைதாங்கிக் கற்கள் அமைக்கப்படுகின்றன. இரண்டு செங்குத்தான கற்களின் மேல் கிடைமட்டமாக ஒரு பலகை கல் வைத்திருக்கும் அமைப்பே சுமைதாங்கி கற்களாகும். அடையாளம் தெரியாத மக்கள் தங்கள் தலைச் சுமையை இறக்கி வைத்து இளைப்பாற வழிவகை செய்வதால், இறந்து பட்ட அவர்கள் மகிழ்வார்கள் என்பது நம்பிக்கை. அப்படி அமைக்கப்பட்ட ஒரு சுமை தாங்கிக் கல் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் - கீழத் திப்பம்பட்டி கிராமத்தில் உள்ளது. இது இக்கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் திரு. தங்கவேல் அவர்களின் தாயார் திருமதி.வீரம்மாள் அவர்கள் நினைவாக அமைக்கப்பட்டது.
ஒன்பது மாத கர்ப்பிணியான திருமதி.வீரம்மாள், பொது ஆண்டு 1981 - ஆம் ஆண்டு ஐப்பசி 6 ஆம் நாள் (அக்டோபர் 22, 1981) வியாழக் கிழமை அன்று இயற்கை எய்தினார். அவர் நினைவாக சாலையோரத்தில் ஒரு சுமைதாங்கிக் கல்லை குடும்பத்தினர் அமைத்துள்ளனர். திரு. தங்கவேல் மற்றும் அவர் குடும்பத்தினர் ஒவ்வொரு ஐப்பசி மாதம் 6 ஆம் நாளன்றும் புத்தாடை, காதோலை, கருகமணி, வாழைப்பழம், தேங்காய் இவற்றோடு படையலிட்டு வழிபாடுகள் நடத்தி தன் தாயை நினைவு கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
விழாவின் தொன்மை
பொது ஆண்டு 1981 முதல் இவ்வழிபாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பலியிடல்
இல்லை
பொறுப்பாளர்
தனிநபர் / குடும்பம்
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
சுமைதாங்கி கல்லின் முன்பு படையலிட்டு வழிபாடுகள் நடைபெறும்.
சிறப்பம்சங்கள்
புத்தாடைகள், காதோலை, கருகமணி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து படையலிடப்படுகிறது.
History / Story of the Festival
Load-bearing stones are set up along roadsides in memory of pregnant women who died unable to bear the child and family members who died under the burden of family responsibilities. A load-bearing stone consists of two vertical stones with a horizontal stone placed on top. It is believed that when unknown people rest their heads on these stones to relieve their burdens, the departed souls will be pleased.
One such load-bearing stone is located in Keezhathippam Patti village, Rettiar Chattram Union, Dindigul district. It was established in memory of Mrs. Veerammal, the mother of Mr. Thangavel from this village.
Mrs. Veerammal, who was nine months pregnant, passed away naturally on Thursday, October 22, 1981 (Ippasi 6, 1981). In her memory, the family set up a load-bearing stone along the roadside. Every year on October 6, Mr. Thangavel and his family offer prayers at the stone with offerings like betel leaves, areca nut, karugamani, banana, and coconut to honor and remember their mother.
Antiquity of the Festival
This worship has been observed since 1981.
Sacrifice
No
Programme details
Ritual offerings and worship are performed in front of the load-bearing stone.
Highlights of the Festival
New clothes, betel leaves, karugamani, coconut, banana, and betel nut leaves are offered as part of the ritual.