தோணுகால், காரியாபட்டிக்கும் கல்குறிச்சிக்கும் இடையில் உள்ள சிற்றூர் ஆகும். இவ்வூரின் கண்மாயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு மடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள இரண்டு மடைக்கல் தூண்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதல் மடையில் உள்ள இராஜராஜ சோழரின் 17ஆவது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டில், மங்குன வெண்டீசன் என்னும் பூங்கா நாட்டுக்கோன் என்பவர், குளங்கண்டு மடையை அமைத்துள்ள செய்தி வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளது. மற்றொரு மடைக் கல்வெட்டில் ’வரகுண பாண்டிய பூங்கா நாட்டுக்கோன்’ என்று எழுதப்பட்டுள்ளது. இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள ’பூங்கா நாடு’ என்பது பாலவநத்தம் பகுதியை உள்ளடக்கியதாகும்.
Regnal year
17th regnal year
A historic year
1002 CE
Additional Information
Thonugal is a small village located between Kariyapatti and Kalkurichi. The village's irrigation tank (Kanmai) has two sluice gates (madais) that were constructed over a thousand years ago. Inscriptions are found on the stone pillars of both sluices. The first sluice bears an inscription from the 17th regnal year of Rajaraja Chola, engraved in Vattezhuthu script. It records that a person named Manguna Vendīsan, also referred to as Pūngā Nāttu Kōn, was responsible for constructing the sluice after inspecting the tank. The second sluice inscription mentions the name Varaguna Pandya Pūngā Nāttu Kōn. The term "Pūngā Nādu" mentioned in the inscriptions refers to a region that included the Palavanatham area.
தகவல்
முனைவர் கந்தசாமி
Details
Dr. B. Kandasamy
குறிப்புகள்
புத்தகம் - "வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்", பக்கம்-239