Near the Vadamalai Nachiamman Temple in Bodinayakkanur
Language & Script
Tamil and Vattezhuthu
Period / King
Early Pandya period
Village Name
Bodinayakkanur
District
Theni
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 9-10ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்தக் கல்வெட்டு தமிழ் மொழியிலும் வட்டெழுத்திலும் எழுதப்பட்டுள்ளது. 11 வரிகள் கொண்ட இக்கல்வெட்டில் முதல் மூன்று வரிகள் பாடல் வடிவில் வெட்டப்பட்டிருக்கின்றன. 'மரங்கள் அடர்ந்த சோலையிலுள்ள, ஆநிரைக்குள் புலி ஒன்று புகுந்து பசுக்களைக் கொல்கிறது. இதைக்கண்ட தென்னவன் என்பவன், புலியுடன் சண்டையிட்டு ஆநிரைகளைப் பாதுகாத்து வீரமரணமடைகின்றான். அவனுடைய வீரத்தையும் புகழையும் சொல்வது அவ்வளவு எளிதல்ல', என்ற செய்தியே வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சேதமடைந்த நிலையில் இருப்பதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை.
இது பொது ஆண்டு 9 - 10ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட முற்காலப் பாண்டியர்காலக் கல்வெட்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
A historic year
9th - 10th Century CE
Additional Information
This inscription is written in the Tamil language and in Vattezhuthu script. The inscription consists of 11 lines, with the first three lines engraved in the form of a song. The message engraved in Vattezhuthu inscription reads: "A tiger entered a dense grove, where there was a herd of cows, and killed them. A person name 'Thennavan', witnessing this, fights with the tiger and protects the herd. Thereby dying a heroic death. It is not easy to describe his bravery and glory." As the inscription is in a damaged state, the complete message cannot be deciphered. It is believed that this inscription may belong to the 9th-10th century CE, during the early Pandya period.