On the western side of Uppukottai, at Rompachi Amman lakeside (Kulakkarai)
Language & Script
Tamil and Vattezhuthu
Period / King
Varaguna Padiyan I
Village Name
Uppukottai
District
Theni
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 8-9ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
ஒரு பலகைக் கல்லின் இரண்டு பக்கமும், பொது ஆண்டு 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் முன்பகுதியில், முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் அயநாட்டுத் திருவடிப் புத்தூர் ஆழ்வாருக்கு, நாள்தோறும் விளக்கு எரிப்பதற்காக அடிப்பொடி குழவன் என்பவன் 25 சாவா மூவாப் பேராடுகளைக் கொடை அளித்துள்ளான் என்ற செய்தி காணப்படுகிறது. இவ்வாடுகள் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தைக் கொண்டு நாள்தோறும் விளக்கு எரிக்கும் பணியைப் பத்தமலை வீரர்கள் செய்து வந்துள்ளனர். இந்த தர்மத்தைப் பல்லாயிரம் என்னும் குழுவினர் பாதுகாத்து வந்துள்ளனர் என்ற செய்தியையும் கூறுகிறது.
இக்கல்வெட்டின் பின்புறம் அயநாட்டுத் திருவடிப்புத்தூர் ஈஸ்வரன் கோயிலுக்கு நாள்தோறும் விளக்கு எரிப்பதற்காக வடுவூரான் வருத்தி ரவி இயக்கர் என்பவர் 100 சாவா மூவாப் பேராடுகளைக் கொடை அளித்துள்ளார் என்றும், இதைத் தனியன் முட்டை என்பவன் பாதுகாத்து வந்துள்ளான் என்ற செய்தியும் வெட்டப்பட்டிருக்கிறது.
A historic year
8th 9th Century CE
Additional Information
On both sides of a stone slab, a 9th century CE Vattezhuthu inscription has been engraved. The inscription on the front side of the slab records that during the reign of Varaguna Pandiyan the first, a person named Adipodi Kuzhavan donated 25 "Sāvā Mūvā Pērādu" (Goats) for the purpose of lighting a lamp every day at the shrine of the Ayanādu Thiruvadi Putthūr Āzhwār. The income obtained from raising and milking these goats was used by the Paththamalai warriors to carry out the task of lighting the lamp every day. The inscription also mentions that this endowment was protected by a group called Pallāyiram.
On the reverse side of the inscription, it states that for lighting a lamp every day at the Ayanāttu Thiruvadiputthūr Īswaran temple, a person named Vadavūrān Varuththi Ravi Iyakkar donated 100 "Sāvā Mūvā Pērādu" (Goats). It further mentions that this was safeguarded by a person named Thaniyan Muttai.