The inscription is found on the tomb near the Thirupparankundram All Women Police Station.
Language & Script
Tamil
A historic year
18th century CE
Village Name
Thirupparankundram
District
Madurai
கூடுதல் விவரங்கள்
இக்கல்வெட்டு பாப்பாள் என்ற தேவரடியாருக்கென சமாதி (கல்லறை) எழுப்பியதைக் கூறுகிறது. சுமார் 6 அடி நீளம், 6 அடி அகலம், 6 அடி உயரத்தில் இச்சமாதியானது கட்டப்பட்டுள்ளது. உட்புறத்தில் செங்கல் மற்றும் சுதையும், வெளியே செவ்வக வடிவத்தில் பல கற்களையும் இணைத்து இக்கல்லறை கட்டப்பட்டுள்ளது. இக்கல்லறையின் முன்பக்கத்தில் இரண்டாவது அடுக்கில் சுமார் 1 அடி உயரம் 6 அடி நீளத்தில் கல்வெட்டு காணப்படுகிறது. 3 அடி நீளமுள்ள 2 கற்களை இணைத்து இக்கல்வெட்டு செதுக்கப்பட்டு உள்ளது. இக்கல்வெட்டில் 5 வரிகள் உள்ளன. தாது வருடம் மாசி மாதம் 30ஆம் தேதி திருப்பரங்குன்றத்திலிருக்கும் தேவரடியார் பொன்னம்மாள் மகளான பாப்பாள் இறந்து போகின்ற காலத்தில் தன்னுடைய சொத்துக்களை விற்றுத் தனக்குச் சமாதி (கல்லறை) கட்டும்படியும், துவாதசி கட்டளை (பன்னிரண்டாம் திதி) நடத்தும்படியும் அத்தியான சேனாபதி அய்யர் மற்றும் குமாரசாமியா பிள்ளை என்பவர்களிடத்தில் கேட்டுக்கொண்டபடி செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.
கல்வெட்டு:
1 உ தாது வரு மாசி மீ 30 திறுப்பறங்குன்றதிலிறுகும் தாசி பொ
2 ன்னம்மாள் மகள் பாப்பாள் யிறந்து போற காலத்தில் தன்னுடைய
3 சொத்துகளை வித்து தனக்கு சமாதிகட்டும் படிக்கும் துவாதெசி கட்ட
4 ளை நடத்தும் படிக்கு அதியான சேனாபதி அய்யற் குமாறுசாமியா
5 பிள்ளை யிடத்தில் சொன்னபடிக்கி நடத்தியிருக்குரது உ.
Additional Information
The inscription states that a tomb (samādhi) was constructed for a dhevadhāsi named Pāppāl. The tomb measures approximately 6 feet in length, 6 feet in width, and 6 feet in height. The interior is built with bricks and lime mortar, while the exterior is constructed by joining square-shaped stones. On the front side of the tomb, in the second layer, there is an inscription about 6 feet long and 1 foot high. It is carved on two stones, each 3 feet in length, joined together. The inscription contains 5 lines. It states that in the tamil year of Dhāthu, on the 30th day of the Tamil month of Māsi, Pāppāl, daughter of dhevadhāsi Ponnammāl of Thirupparankundram, passed away. Before her death, she sold her property and requested that a tomb be constructed for her, and that Dwāvadasi rituals ( the 12th day thithi) be conducted. This was carried out as per her request by Adhiyāna Senāpathi Iyer and Kumārasāmiyā Pillai.