யானை மலை, ‘ஆனைமலை’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆனைமலையில் உள்ள குகைத் தளத்தில் ஏறக்குறைய 20 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் தமிழி /தமிழ்ப் பிராமி கல்வெட்டு காணப்படுகிறது. இது பொது ஆண்டு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
கல்வெட்டு:
இவ குன்றத்தூ உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன்
அத்துவாயி அரிட்டகாயிபன்
என்னும் இரண்டு வரிகள் இடம் பெற்றுள்ளன. ’இபம்’ என்றால் யானை, ’குன்றம்’ என்றால் மலை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ’இவ குன்றம்’ என்பது ஆனைமலையைக் குறிக்கிறது. ’பா’ என்றால் படுக்கை/ தங்குவதற்கான கற்படுக்கை எனப் பொருள் கொள்ளலாம். ஏரி ஆரிதன், அத்துவாயி அரட்டக்காயிபன் என்று இரண்டு துறவியர் பெயர்களும் காணப்படுகின்றன.
Additional Information
Yanai Malai, also known as Ᾱnaimalai ("Elephant Hill"), contains a cave shelter site where approximately 20 stone beds have been carved. At this site, a Tamili or Tamil-Brahmi inscription is found, which dates to the 2nd century CE.
The word "ibam" means elephant, and "kuṉdṟam" means hill or mountain. Thus, "Iva kuṉṟam" refers to Āṉaimalai (Elephant Hill). The word "pā" means bed. These lines in the inscription can be interpreted as referring to a stone bed meant for dwelling. The names of two ascetics are also mentioned: Ēri Ārithaṉ and Aththuvāyi Ariṭṭakāyipaṉ.