It is located on private land in Pudukkulam near Kombai Village.
Language & Script
Tamil
Period / King
Later Pandya Period
Village Name
Kombai, Kusavampatti
District
Theni
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 14 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
குசவம்பட்டி ஊருக்கு கிழக்கே உள்ள முத்தாலம்மன் குளத்திற்கு தென்மேற்காக அமைந்திருக்கும் ஒரு தனியார் நிலத்தில் உள்ள சிறிய பாறை எல்லைக்கல்லாக மாற்றப்பட்டு அதில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இக்கல்லின் மேல் பகுதியில் சூரியன், சந்திரன், சங்கு, சக்கரம், நாமம் போன்ற வடிவங்கள் காணப்படுகின்றன. பூலான்துறை இரசன் திருவிடையாட்டமான மலப்பட்டி என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் இருந்து அழிந்து பட்ட மலைப்பட்டி என்ற ஊரே கல்வெட்டில் மலப்பட்டி என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். இது பூலான்துறை சிவன் கோயிலுக்கு தானமாக தரப்பட்டது என்ற செய்தி வெட்டப்பட்டுள்ளது. பூலான் துறை சிவன் கோயில் என்பது இன்று இருக்கக்கூடிய சின்னமனூர் சிவன் கோயிலாகும்.
கல்வெட்டின் எழுத்து அமைதியின் அடிப்படையில் இது பொது ஆண்டு 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
A historic year
14th Century CE
Additional Information
A small rock on a private land located southwest of the Muthalamman pond east of Kusavampatti village has been converted into a boundary stone and inscriptions have been engraved on it. The upper part of this stone shows figures like the sun, moon, conch, wheel and nāmam (vaishnavite sectarian mark). The inscription mentions Malapatti as Pūlanturai Irasan Tiruvidaiyattam. The inscription may refer to the village called Malaipatti as Malapatti, which was ruined or disappeared from this area. It is mentioned in the inscription that it was donated to the Pūlanturai Siva temple. The Pūlanturai Siva temple is the Chinnamanur Siva temple that exists today._x000D_
Based on the palaeography of the inscription, it is believed that it may belong to the 14th century AD.