கூடக்கோவில் கண்மாய்க்கரையில் கருப்பண்ணசாமி கோயிலுக்கு அருகில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. சிவன் கோயிலுக்கு வடபுறமுள்ள பாறையில் உள்ள இக்கல்வெட்டில் ”ஸ்ரீ கரணத்தான்” என்று எழுதப்பட்டுள்ளது. இது ஊர்க் கணக்கன் பெயரில் செய்யப்பட்ட தானம், அல்லது ஊர்க்கணக்கனுக்குரிய நிலப்பகுதியைக் குறிப்பிடும் கல்வெட்டாக இருக்கலாம். இக்கல்வெட்டு 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
Additional Information
Near Karuppannasami Temple on the Kanmai shore, there is a Sivan temple. On the rock to the north of the Sivan temple, this inscription is engraved with “Sri Karanathan.” It may be a donation made in the name of the village accountant or may indicate land belonging to the village accountant. This inscription is believed to date back to the 10th century.
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
Details
Dr. B. Athmanathan
குறிப்புகள்
இந்த மேற்கூறிய இரண்டு கல்வெட்டுகளும் நடுவண் அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் 267/1964 & 268/1964 இல் வெளிவந்துள்ளன. ஆதாரம் : தினகரன் நாளிதழ், 10, 2023.
Reference
The above two inscriptions were published in the ASI Department’s Epigraphy Annual Report as Nos. 267/1964 and 268/1964. Source: Dinakaran newspaper, 10, 2023.