Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தமிழி / தமிழ் - பிராமிக் கல்வெட்டு

Tamili /Tamil - Brahmi Inscription

அமைவிடம்

புலிமான் கோம்பை என்ற ஊரில் ஒரு விவசாய நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டு தற்போது கீழடி அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.


மொழியும் எழுத்தும்

தமிழி/தமிழ் பிராமி


காலம் / அரசன்

சங்க காலம்


ஊர்

புலிமான் கோம்பை அல்லது புள்ளிமான் கோம்பை

மாவட்டம்

தேனி

ஆட்சி ஆண்டு
பெரும் கற்களத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது
வரலாற்று ஆண்டு
1 ஆம் கல்வெட்டு - பொது ஆண்டுக்கு முன் 3ஆம் நூற்றாண்டு

2&3 ஆம் கல்வெட்டு - பொது ஆண்டுக்கு முன் 4ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
வைகை ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள புலிமான் கோம்பை கிராமத்தில் விவசாய நிலம் ஒன்றை சீர்படுத்தும் பொழுது 3 அடி உயரம் 1.5 அடி அகலமுடைய பெருங்கற்காலத்தைச் சேர்ந்த மூன்று ஈமச்சின்னங்கள் 2006 ஆம் ஆண்டு தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ‘எழுத்துடை’ நடுகற்கள் முதன்முதலாக இங்கு கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இம்மூன்று நடுகற்களிலும் காலத்தால் மிகத் தொன்மையானதாக கருதப்படும் தமிழி என்ற தமிழ் பிராமி எழுதுக்கள் வெட்டப்பட்டிருப்பது சிறப்பாகும்.

1 ஆம் கல்வெட்டு - ’வேள் ஊர் அவ்வன் பதவன்'

வேல் ஊரைச் சேர்ந்த பதவன் அவ்வன் என்பவன் நினைவாக இந்நடுகல் எடுக்கப்பட்டிருக்கிறது என்ற பொருளை தரும் விதமாக இக்கல்வெட்டு உள்ளது.

2 ஆம் கல்வெட்டு - ' ...அன் ஊர் அதன்

..(ன்)அன் கல்’

கல்வெட்டின் முன் பகுதி உடைந்திருப்பதால் முழுமையான பொருளை அறிய முடியவில்லை. எஞ்சியுள்ளது இரண்டு வரி கல்வெட்டாக உள்ளது. அன் ஊரைச் சேர்ந்த ஆதன் என்பவருடைய (மகன்) இறந்துவிட்டதன் நினைவாக இக்கல் எடுக்கப்பட்டிருக்கலாம் என சில ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

3 ஆம் கல்வெட்டு - ’கல்

பேடு தீயன் அந்தவன்

கூடல் ஊர் ஆகோள்’

மூன்று வரிகள் கொண்ட இக்கல்வெட்டு கூடலூரில் (இன்றைய குள்ளப்புரத்தில்) நடைபெற்ற ஆகோள் பூசலில் வீரமரணம் அடைந்த அந்தவன் என்பவன் நினைவாக இக்கல் எடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை தருகிறது. ஆகோள் என்ற வார்த்தை ஆநிரைகளை கவர்தல் (பகைவரின் பசுக்களை கவர்ந்து வருதல்) என்ற பொருளை தரும்படியாக உள்ளது. இதற்கு உதாரணமாக தொல்காப்பியத்தில் அகோள் என்பதை ஆநிரை கவர்தல் என்று புறத்திணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை கூறலாம். சங்க இலக்கியங்களில் ஆநிரை கவர்தலை வெட்சிப் பூசல் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் வெட்சிப்பூசலி இறந்துபட்ட வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என்பது தெளிவாகிறது. ஆகோள் பூசல் பற்றி குறிப்பிடும் பழமையான கல்வெட்டாகவும் இது உள்ளது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

மு. அகிலன்

மு. அகிலன்

மு. அகிலன்

மு. அகிலன்

மு. அகிலன்

மு. அகிலன்