Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கண்மாய் கல்வெட்டு

Irrigation Tank Inscription

அமைவிடம்

ஆமூர் கண்மாய் கரையில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழ் மற்றும் வட்டெழுத்து


காலம் / அரசன்

பாண்டியர்


ஊர்

ஆமூர்

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 9-10 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இக்கண்பாயில் அமைந்துள்ள மடைத் தூணில் கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு இம்மடையைச் செய்வித்தவனின் பெருமைகளைக் கூறுகிறது. இவன் பாண்டிய மன்னின் அதிகாரியாக விளங்கிய கலிதீரனின் தந்தை சாத்தன் என்று தெரிகிறது.

கல்வெட்டில்:

1. ஸ்ரீபாண்டியன்

2. செங்கோற் ப

3. ராந்தகனான..

4. ..தென்னவன்...

5. பேராரைசு கொ(ண்)

6. ட கலிதீரன் தந்தை

7. சாத்தன்கு...

8. ...லைத்தது...

9. இது காத்தான் கால் கீழ் (என்)

10. தலை

என்ற சொற்கள் வெட்டப்பட்டுள்ளன.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

குறிப்புகள்
மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, பக்கம் எண்-180
புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்