Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தமிழி / தமிழ் - பிராமிக் கல்வெட்டு

Tamili /Tamil - Brahmi Inscription

அமைவிடம்

மகாலிங்க சுவாமி கோயிலுக்கு செல்லும் வழியில் பஞ்ச பாண்டவர் குகைத்தளத்தில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழி/தமிழ் பிராமி


காலம் / அரசன்

சங்கக் காலப் பாண்டியர்கள்


ஊர்

மேட்டுப்பட்டி

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டுக்கு முன் 2 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
பஞ்சபாண்டவர் குகை என்று அழைக்கப்படும் இயற்கை குகைத்தளத்தின் நெற்றிப்பகுதியிலும், குகைத்தளத்தில் உள்ள கற்படுக்கைகளின் தலைப்பகுதியிலும் மொத்தம் 10 தமிழ் பிராமி கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன.

1ஆம் கல்வெட்டு- குகைத்தளத்தின் தென்புறமுள்ள முகப்பு பாறையில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டில், 'அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ' என்று வெட்டப்பட்டுள்ளது. சிரமணர் என்ற சொல்லே சகரம் நீக்கப்பட்டு அமணன் என்று குறிப்பிடப்படுவதாக கருதப்படுகிறது. பொது ஆண்டு 2ஆம் நூற்றாண்டு புகளூர் கல்வெட்டிலும் இச்சொல் (அமண்ணன்) வருகிறது. மதுரை என்ற சொல் இக்கல்வெட்டில் ‘மதிரை’ என்று குறிப்பிடப்படுகிறது. 'உதனஸ' என்ற சொல்லில் வரும் 'ஸ' என்ற எழுத்துக்கு 'உடைய' என்று பொருள் கொள்ளலாம்.

2ஆம் கல்வெட்டு- இடப்புறம் உள்ள முதல் கற்படுக்கையில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில், 'அந்தை அரிய்தி' என்று உள்ளது. இதற்கு அந்தை அரிதி என்பவன் கற்படுக்கை அமைத்தான் என்று பொருள்.

3ஆம் கல்வெட்டு- மேல் வரிசையிலுள்ள மற்றொரு கற்படுக்கையில் 'அந்தை இராவதன்' என்று வெட்டப்பட்டுள்ளது. இதற்கு அந்தை இராவதன் என்பவன் கற்படுக்கை அமைத்தான் என்று பொருள்.

4ஆம் கல்வெட்டு- மேல் வரிசையிலுள்ள மற்றொரு கற்படுக்கையில் '[ம]திர அந்தை [வி]ஸுவன்' என்று வெட்டப்பட்டுள்ளது. இதற்கு மதுரையைச் சேர்ந்த விசுவன் என்பவன் கற்படுக்கை அமைத்தான் என்று பொருள்.

5ஆம் கல்வெட்டு- மேல் வரிசையிலுள்ள மற்றொரு கற்படுக்கையில் 'அந்தை சேந்தன் அதன்' என்று வெட்டப்பட்டுள்ளது. இதற்கு அந்தை சேந்தன் என்பவன் கற்படுக்கை அமைத்தான் என்று பொருள்.

6ஆம் கல்வெட்டு- மேல் வரிசையிலுள்ள மற்றொரு கற்படுக்கையில் 'சந்தந்தை சந்தன்' என்று வெட்டப்பட்டுள்ளது. இதற்கு சந்தந்தை சந்தன் என்பவன் கற்படுக்கை அமைத்தான் என்று பொருள்.

7ஆம் கல்வெட்டு- கீழ் வரிசையிலுள்ள மற்றொரு கற்படுக்கையில் 'பதின் [ஊர்] அதை' என்று வெட்டப்பட்டுள்ளது. இங்கு 'அதை' என்ற சொல் 'அந்தை' என்று படிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு பதினூரைச் சேர்ந்த அந்தை என்பவன் கற்படுக்கை அமைத்தான் என்று பொருள்.

8ஆம் கல்வெட்டு- கீழ் வரிசையிலுள்ள மற்றொரு கற்படுக்கையில் 'குவிர அ[ந்தை] சேய் அதன்' என்று வெட்டப்பட்டுள்ளது. இதற்கு குவிர அந்தை என்பவர் செய்த தானம் என்று பொருள்.

9ஆம் கல்வெட்டு- கீழ் வரிசையிலுள்ள மற்றொரு கற்படுக்கையில் 'குவிர அந்தை வேள் அதன்' என்று வெட்டப்பட்டுள்ளது. இதற்கு குவிர அந்தை வேள் என்பவர் செய்த தானம் என்று பொருள்.

10ஆம் கல்வெட்டு- கீழ் வரிசையிலுள்ள மற்றொரு கற்படுக்கையில் 'திடி இல் அதன்' என்று வெட்டப்பட்டுள்ளது. இதற்கு திடி இல் என்ற ஊரைச் சேர்ந்த அதன்/ஆதன் என்பவர் செய்த தானம் என்று பொருள். திடி இல் என்ற ஊர் தற்போது மேட்டுப்பட்டிக்கு தென்கிழக்கே உள்ள திடியன் என்ற ஊராக இருக்கலாம்.

இம்மலையில் உள்ள குகைத்தளத்தில் சமண சிற்பத்தின் சிம்மாசன அடிப்பகுதி மட்டும் தற்போது காணப்படுகிறது. சிற்பம் காணப்படவில்லை. இக்குகைத்தளத்தில் பழமையான கற்செக்கும், நீர்வடிகால் போன்ற அமைப்பும் உள்ளது.
தகவல்

க.த. காந்திராஜன்

குறிப்புகள்
தமிழ் பிராமி கல்வெட்டுகள், பக்கம் 38-44.§
புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்