சிற்ப அமைதியின் அடிப்படையில், இது பொது ஆண்டு 15- 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்
கூடுதல் விவரங்கள்
யானையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட ஒரு நடுகல் ஸ்ரீ மஞ்சனப் பேச்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ளது. இத்தகைய நடுகல்லை ’யானை குத்திப் பட்டான் கல்’ என்றழைப்பர். இந்நடுகல் இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மேலடுக்கில் வீரன் ஒருவன் தன்னுடைய கையில் வாளை உயர்த்திப் பிடித்துத் தன்னைத் தாக்க வரும் யானையை எதிர்கொள்ளத் தயாராக உள்ள காட்சியைப் புடைப்புச் சிறப்பாகச் செதுக்கியுள்ளனர். வீரன் தன் வலக்காலை மடக்கி, மண்டியிட்டது போல் காணப்படுகிறான். எனவே, இவ்வீரன் யானையுடன் சண்டையிட்டு இறந்திருக்கலாம் எனக் கருத வாய்ப்புண்டு. இறந்த வீரனின் மனைவி சதி என்னும் உடன்கட்டை ஏறித் தன் உயிரை மாய்த்திருக்கலாம் என்பதை வெளிக்காட்ட, கீழ் அடுக்கில் வீரனும் அவருடைய மனைவியும் சேர்ந்து அமர்ந்த நிலையில் புடைப்புச் சிற்பமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.
Inscription
No
Period / King
The sculpture is believed to be from the 14th - 15th Century CE.
Additional Information
A hero stone erected in memory of a warrior who fought with an elephant and attained martyrdom is located in the premises of the Sri Manjana Pechiyamman Temple. This type of hero stone is referred to as the "Yānai kuththi pattān kal" in Tamil. The stone is divided into two segments. On the upper segment, the warrior is depicted, in the form of a relief sculpture, raising his sword and preparing to face the attacking elephant. The warrior is shown kneeling on his right leg, with his left leg bent and foot firmly planted on the ground. In the lower segment of the sculpture, both the warrior and his wife are shown seated together, symbolizing that the warrior's wife may have committing Sati after her husband's death in the battle with the elephant.