At the dam built on the Mullaiyar River, located to the east of Ellapatti village.
worship
4.5 feet in height, 3 feet in width.
Village Name
Ellapatti
District
Theni
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 9-10ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்தச் சிற்பத்தில் காணப்படும் புத்தர், தன் ஒரு காலை முழங்கால் வரை மடித்து, மற்றொரு காலைத் தொடையில் வைத்து (அர்த்த பத்மாசனம்) , உடலை நன்கு நிமிர்த்தியபடி அமர்ந்துள்ளார். ஒரு தடுப்பணையின் அருகே அமைந்துள்ளதால் இச்சிற்பத்தை இப்பகுதி மக்கள் ’அணைப் புத்தம்’ என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்தச் சிற்பத்தில் காணப்படும் புத்தரின் கைகள் தியான முத்திரையில் உள்ளதால் இவர் தியானத்தில் ஆழ்ந்துள்ளார் எனலாம். இவரது தலை உடைந்த நிலையில் உள்ளது. புத்தர் மேலாடையாக ’சங்காதி’ என்னும் ஆடையை அணிந்துள்ளார். இச்சிற்பத்தில் ஆடை காட்டப்பட்டுள்ளதால், தலை உடைந்தபோதிலும் இதைச் சமண சிற்பத்திலிருந்து வேறுபடுத்த முடிகிறது. ஏனெனில், திகம்பர சமணர் ஆடை அணிவதில்லை. எனவே தீர்த்தங்கரர் சிற்பங்களில் பொதுவாக ஆடை காட்டப்படுவதில்லை.
Inscription
No
Period / King
The sculpture is believed to be from the 9th - 10th Century CE
Additional Information
In this sculpture, the Buddha is depicted seated with one leg folded up to the knee and the other placed on the thigh (Ardha Padmasana/half-lotus posture), with his body upright. Since the sculpture is located near a dam, the local people refer to it as the "Anai Buddham" (the Tamil word 'Anai' referes to a Dam). The Buddha's hands are shown in Dhyana Mudra, indicating that he is deep in meditation. His head is broken, but the garment, known as Sanghāti, is visible, which distinguishes this sculpture from Jain representations. In Jain Tirthankara sculptures, clothing is not typically shown, as Digambara Jains do not wear clothes. Therefore, the presence of clothing here clearly identifies this as a Buddhist sculpture rather than a Jain one.