Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சப்த மாதர் சிற்பத் தொகுதி

Sculptural Ensemble of the Seven Mother Goddesses

அமைவிடம்

கெங்குவார்பட்டிக்குத் தெற்குப் பக்கமாக மஞ்சள் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒட்டணை அருகில் உள்ள தென்னந்தோப்பு


அளவு

ஒவ்வொரு சிற்பமும் 3 அடி உயரம் உடைய கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது


வழிபாடு

இல்லை


ஊர்

கெங்குவார்பட்டி

மாவட்டம்

தேனி

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 12 -13ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் சப்த மாதர் சிற்பங்களும், விநாயகர், முருகன் மற்றும் அடையாளப்படுத்த முடியாத மூன்று உடைந்த சிற்பங்களும் காணப்படுகின்றன. இச்சிற்பங்கள் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கோவில் ஒன்றில் இருந்துள்ளன. ஆனால், மஞ்சளாற்றின் வெள்ளப்பெருக்கின் காரணமாகவும், அண்மையில் தடுப்பணை கட்டப்பட்டதன் காரணமாகவும் இக்கோவில் இடிந்துபோனது. இச்சிற்பங்கள் மற்றும் கோவிலின் பிற பாகங்கள் அழிவிலிருந்து மீட்கப்பட்டு அருகில் ஒரு தென்னந்தோப்பில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. சப்த மாதர் சிற்பங்கள் என்பது ஏழு பெண் தெய்வங்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரின் சிற்பங்களைக் குறிப்பதாகும். பொதுவாகக் கோவில்களில் சப்த மாதர் சிற்பங்களின் இருபுறமும் விநாயகர் மற்றும் வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங்கள் வைக்கப்படும். ஆனால், இங்கு வீரபத்திரர் காணப்படவில்லை. இங்குக் காணப்படும் விநாயகர் லலிதாசனத்தில் அமர்ந்துள்ளார். முருகரும் கௌமாரியும் கன்னிமாடத்துடன் காணப்படுகின்றனர்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

மு.அகிலன்

மு.அகிலன்

மு.அகிலன்

மு.அகிலன்

மு.அகிலன்

காணொலி

மு.அகிலன்