இவை ஒரு தந்தை, இருதாய் மக்களிடையே நடந்த சண்டையில் மாண்டவர்களுக்கு உறவினர்கள் வைத்த நடுகற்கள் என்ற செவிவழிச் செய்தி உள்ளது.
காலம் / அரசன்
வரலாற்றுக் காலம்
கூடுதல் விவரங்கள்
கல்யாணக் கருப்புக்கோவிலின் வெளிப்புறத்தில் இரண்டு நடுகற்கள் உள்ளன. இடப்புறமுள்ள முதல் நடுகல்லில் கணவனும் மனைவியும் கைகூப்பி வணங்கும் தோற்றத்தில் செதுக்கப்பட்டுள்ளனர். வலப்புறமுள்ள நடுகல்லில் உள்ள ஆணின் இடக்கையில் வேல் கம்பு உள்ளது. இந்நடுகல்லில் உள்ள பெண்ணின் உயரம் மிகக் குறைவாக உள்ளது. இவர்கள் நால்வருமே நீண்ட காதுகள், நிறைய அணிகலன்கள் மற்றும் கொண்டையுடன் / தலைப்பாகையுடன் காணப்படுகின்றனர். உசிலம்பட்டி வட்டாரத்தில் இன்றும் பலர் காது வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Story
According to an oral tradition, these memorial stones were erected by the relatives for those who perished in a conflict between the descendants of two different wives of a man.
Period / King
Historical period
Additional Information
Outside the Kalyana Karuppu temple, there are two memorial stones. The first stone on the left features a relief sculpture of a husband and wife depicted with folded hands in a gesture of reverence. The memorial stone on the right shows a man holding a spear in his left hand. The woman depicted on this stone is shorter in stature. All four figures have long ears, wear numerous ornaments, and have either a hair bun or a headpiece. It is noteworthy that in the Usilampatti region, many people still maintain elongated ears to this day.