Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகல்

Hero Stone

அமைவிடம்

உசிலம்பட்டி வட்டம் கள்ளபட்டி அருகில் கரையாம்பட்டி என்ற கிராமத்தில் இந்த நடுகல் காட்டுப் பகுதியில் உள்ளது.


அளவு

5 அடி உயரம், 3.1 அடி அகலம்


வழிபாடு

ஆம்


ஊர்

கரையாம்பட்டி

மாவட்டம்

மதுரை

கதை
முத்துத்தேவனின் மகனான கொப்புல்லாத் தேவன் சல்லிக்கட்டில் பெயர் பெற்றவர். ஒருமுறை தனியாளாக ஆநிரைகளைக் கவர்ந்து மாட்டின் மேல் அமர்ந்து வரும்போது மாடுகளின் உரிமையாளர் காவல்காரர்களை வைத்து ஈட்டியை எறியும்போது, ஈட்டி முதுகில் பாய்ந்து இவர் இறந்தார் என்று சொல்லப்படுகிறது. இவருக்கு நடுகல் நட்டு இவரது வம்சாவளிகள் வழிபட்டு வருகின்றனர்.
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 15ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்நடுகல்லில் சித்தரிக்கப்பட்டுள்ள ஆண், தன் வலக்கையில் ஈட்டியும், தன் இடுப்பில் இடக்கையையும் வாளையும் வைத்துள்ளான். இவரின் கழுத்து, காதுகள், கைகள் ஆகியவற்றில் அணிகலன்கள் உள்ளன. ஆநிரை கவர்தல் என்பது இனக்குழுக்களிடம் நீண்ட காலமாக இருந்துவரும் பழக்கமாகும். அவ்வாறு ஆநிரைகளைக் கவர்ந்து வரும்போது, மாடுகளின் உரிமையாளரின் ஈட்டி முதுகில் பாய்ந்து இவர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவரை இப்பகுதி மக்கள் ’கருப்பன்’ என்ற பெயரில் வழிபடுகின்றனர். தை மாதம், சிவ ராத்திரி மற்றும் இவரது வம்சாவளிகளுக்குறிய முக்கிய நாட்களில் இந்த நடுகல்லுக்கு வெள்ளாடை (கொசவம்) உடுத்தி; வாழைப்பழம், தேங்காய், சூடம், பத்தி போன்றவற்றைக் கொண்டு வழிபடுகின்றனர்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
ஆய்வாளர் அருண் பேய்க்காமன் (தென்கல்லக நாட்டில் நடுகற்கள்)
புகைப்படங்கள்

ஆய்வாளர் அருண்குமார்