Located along the banks of the Vaigai River in Kuruvithurai.
Inscription
No
Village Name
Kuruvithurai
District
Madurai
காலம் / அரசன்
வரலாற்றுக் காலம்
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் இரண்டு நடுகற்கள் காணப்படுகின்றன. இவை வீரச் செயல்களைச் செய்து இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களாகும். ஒரு நடுகல் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நடு கற்களிலும் ஒரே மாதிரியான புடைப்புச் சிற்ப அமைப்பு காணப்படுகிறது. இந்த நடுகற்கள் இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலடுக்கின் நடுப்பகுதியில் ஓர் ஆண் நின்று கொண்டிருக்கிறார். அவரது இரு புறங்களிலும் இரண்டு பெண்கள் காணப்படுகின்றனர். கீழ் அடுக்கில் குதிரையின் மேல் அமர்ந்துள்ள வீரனின் புடைப்புச் சிற்பம் காட்டப்பட்டுள்ளது. பீடத்தின் கீழ் அமைந்துள்ள நடுகல்லின் மேல் அடுக்கில் ஒரு சிறிய குழந்தையின் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையின் அருகில் காணப்படும் ஆண் வில் மற்றும் கதை ஆகிய ஆயுதங்களை ஏந்தியுள்ளார். இந்த நடுகல்லை இவ்வூர் மக்கள் தற்போது தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
Period / King
Historical period
Additional Information
At this site, two hero stones (Nadukal) can be found. These stones were erected in memory of individuals who died performing heroic acts. One of the hero stones is placed on a pedestal. Both hero stones feature a similar relief sculptural representation. The hero stones are divided into two sections.
Upper section: In the center, a male figure is depicted standing, flanked by two female figures on either side. Lower section: A warrior is shown riding a horse, portrayed in relief.
On the upper section of the hero stone placed below the pedestal, a small child’s figure is also carved. Beside this child, a male figure holding weapons such as a bow and mace is depicted. The people of this village now worship these hero stones as deities.