Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மாலையம்மன் சிற்பம்

Mālai Amman Sculpture

அமைவிடம்

இரயில் பாதைக்கும் மலை அடிவாரத்திற்கும் இடையே அமைந்துள்ள மாலைத் தோட்டம் என்ற பகுதியில் இக்கற்றூண் காணப்படுகின்றது.


அளவு

7 அடி உயரம், 1 அடி அகலம், 1 அடி கனம்


வழிபாடு

ஆம்


ஊர்

மாலைத் தோட்டம், அழகன்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
சுமார் 350 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் காணப்படும் வழிபாட்டுத் தூண் கல்லை இவ்வூர் மக்கள் ’மாலையம்மன்’ என்ற பெயரில் வழிபடுகின்றனர். அண்மைக்காலத்தில், இந்த வழிபாட்டுத் தூண் கல்லைச் சுற்றிச் செங்கல்லால் ஆன சதுர வடிவக் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. இது சாளரங்கள் இல்லாத கட்டடம் ஆகும். இந்த வழிபாட்டுத் தூண்கல்லின் 4 பக்கங்களும் 8 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த வழிபாட்டுத் தூண் கல்லின் மேல் பகுதியில் குவிமாடம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப் பகுதி மண்ணுக்குள் புதைந்துள்ளது. இரு அடுக்குகளுக்கு நடுவில் அலங்கார வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தூணின் ஒரு பக்கத்தின் மேல் பகுதியில் சிவலிங்கம், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த வழிபாட்டுத் தூண் கல்லில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களில் இறை உருவங்கள் மற்றும் கால்நடைச் சமூகத்தின் வாழ்வியலை வெளிப்படுத்தும் காட்சிகள் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் புல்லாங்குழல் மற்றும் பிற இசைக் கருவிகள் வாசிப்பவர்கள், வில்லுடன் வேடர்கள், கால்நடைகளுடன் மனிர்தர்கள், குதிரை மீது அமர்ந்திருக்கும் வீரனுக்குச் சேவகன் ஒருவன் குடை பிடிக்கிறான், இவர்களின் அருகில் கள் குடத்துடன் நிற்கும் பெண், வேணுகோபாலர் ஆநிரைகள் மத்தியில் புல்லாங்குழல் வாசிக்கிறார், புலியால் தாக்கப்படும் மாடு ஒன்றைக், கையில் குச்சி பிடித்துள்ள மனிதர் ஒருவர் காப்பாற்ற முயல்கிறார். இந்தத் தூண் கல்லில் மொத்தம் 32 காட்சித் தொகுப்புக்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் சில அடுக்குகள் தரையில் புதைந்திருக்கலாம். இதில் கல்வெட்டுக்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்தப் புடைப்புச் சிற்பங்களின் வடிவ அமைதி மற்றும் அவற்றில் காணப்படும் ஆடை, ஆபரணங்களைக் கொண்டு இவை சுமார் 350 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது. இச்சிற்பத் தூணை இன்றளவும் இப்பகுதி மக்கள் சிலர் வழிபட்டு வருகின்றனர்.
தகவல்

க.த. காந்திராஜன்

புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்