Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தீர்த்தங்கரர் சிற்பம்

Tirthankara Sculpture

அமைவிடம்

பாலவநத்தம் வடக்குப் பகுதி - வடக்குப் பட்டி என்றும் அழைக்கப்படுகிறது.


அளவு

4 அடி உயரம், 2 அடி அகலம்


வழிபாடு

ஆம்


ஊர்

பாலவநத்தம்

மாவட்டம்

விருதுநகர்

கதை
விருதுநகர் மாவட்டத்தில் குண்டாற்றங்கறையில் பொது ஆண்டு எட்டு - பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண மதம் தொடர்பான பல்வேறுச் சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகப் பாலவநத்தம் என்ற ஊரின் வடக்குப் பகுதியில் இந்தத் தீர்த்தங்கரர் சிற்பம் காணப்படுகிறது.
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 9-10ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்தச் சிற்பம் சமணத் தீர்த்தங்கரரின் சிற்பமாகும். இச்சிற்பத்தில் காணப்படும் தீர்த்தங்கரர் அமர்ந்த நிலையில் (அர்த்த பரியங்காசனம்) உள்ளார். இவருக்கு நீள் காதுகள் உள்ளன. தலைக்கு மேல் மரமும் அதன்மேல் முக்குடையும் காட்டப்பட்டுள்ளன. இவருக்குப் பின்புறம் தோரணங்களும், இரண்டு சாமரம் வீசுபவர்களும், சிம்மம் போன்ற உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிற்பத்தை இவ்வூர் மக்கள் காவல் தெய்வமாகக் கருதி தற்போது வழிபடுகின்றனர். ஒரு சிலர் இதை ஐயனார் என்றும், ஒரு சிலர் கருப்பசாமி என்றும் பெயர்சூட்டி வழிபடுகின்றனர்.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

ஸ்ரீதர்

ஸ்ரீதர்