இந்த நடுகல் புடைப்புச் சிற்பத்தில் வீரன் ஒருவன் தன் வலக்கையில் நீளமான வாளையும் இடக்கையில் வளரி ஒன்றையும் பிடித்தவாறு தன் மனைவியுடன் பீடத்தில் அமர்ந்துள்ளான். இது போரில் மாண்ட வீரனுக்கும், உடன்கட்டை ஏறிய அவன் மனைவிக்கும் எடுக்கப்பட்ட நடுகலாக இருக்கலாம். இவ்விருவரின் அணிகலன், கொண்டை, நீள்காதுகள், ஆடை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இச்சிற்பம் பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால சிற்பமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்வூர் மக்கள் சிலர் இதை மருதுபாண்டியர் சிலை என்று அழைக்கின்றனர்.
அளவு
2 அடி அகலம், 3 அடி உயரம்
Additional Information
This bas-relief sculpture depicts a warrior sitting on a pedestal with his wife, holding a long sword in his right hand and a scythe in his left. This may be a hero-stone erected for a warrior who died in battle and his wife committed sati by entering into the funeral pyre along with her deseased husband. Judging by the ornaments, hair knot, long ears and clothing of the two, it is believed that this sculpture may belong to the Nayaka period of the 17th century. Some people in this village call it as the sculpture of Marudu Pandya.