அமைவிடம்
வாகைகுளத்திலிருந்து திடியன் செல்லும் வழியில் அரசு பள்ளியைக் கடந்து முத்தையா கோயில் அருகில் அமைந்துள்ளது.
வழிபாடு
ஆம்
கதை
இந்த நடுகல் ஆசிரியருக்கு மாணவர்கள் எடுத்த நடுகல் ஆகும். நடுக்கல் சிற்பத்தில் காணப்படும் திரு. பாக்கியநாதன் என்பவர் ஆங்கிலேயர் காலத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் ஆவார். பாக்கியநாதன் இயற்கையாக மரணமடைந்த பின்னர், அவரது புதல்வன் ராமசாமியும் அவரது மாணவர்களும் இணைந்து ஒரு நடுகல்லை எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் இதுபோன்ற நடுகற்கள் மிகவும் அரியது.
ஊர்
பெரிய வாகைக்குளம்
மாவட்டம்
மதுரை