அமைவிடம்
சின்ன வாகைக்குளம் கிராமத்தின் மந்தையின் மேற்கு பக்கம் உள்ளது.
வழிபாடு
ஆம்
கதை
பல காலம் முன்பு, சின்னமாயன் என்பவன் இவ்வூரில் நடந்த போட்டியில் தான் தோல்வியடைந்ததைத் தாங்க முடியாமல் இறந்து விட்டான். சின்னமாயனின் தாத்தா இவனது நினைவாக, ஒரு சுமைதாங்கி கல்லை எழுப்புகிறார். பின்னர், தங்கள் ஒரே குல வாரிசும் இறந்து விட்டதால் தனது நாக்கை பிடுங்கி அவரும் இறந்து விடுகிறார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பங்காளிகள் அனைவரும் சேர்ந்து சின்னமாயனுக்கு ஒரு நடுகல் எழுப்பி வழிபடுகின்றனர் என்றும் செவிவழிச் செய்தி உள்ளது.
ஊர்
சின்ன வாகைக்குளம்
மாவட்டம்
மதுரை