It is located to the south of Valaiyapatti village.
worship
A square-shaped stone approximately 6 feet in height and 1 foot in width.
Village Name
Valayapatti
District
Dindigul
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
இவ்வழிபாட்டுத் தூண் கல்லின் நான்கு புறமும் ஆறு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பக்கமும் உள்ள அடுக்குகளில் பல காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வேணுகோபாலர் ஆநிரைகள் மத்தியில் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சி, மனிதன் ஒருவன் நீளமான ஆயுதத்தால் பன்றி போன்ற விலங்கை தாக்கும் காட்சி, வில், ஈட்டி மற்றும் மலர்கள் எந்திய பெண்கள் வரிசையாக நிற்கும் காட்சி, மாடுகள் சண்டையிடும் காட்சி, ஆயுதமேந்திய ஆண்கள் சண்டையிடும் காட்சி, கண்ணப்ப நாயனார் கதையை நினைவூட்டும் வகையில் சிவலிங்கத்தின் மேல் தன் காலை பதித்தவாறு நிற்கும் மனிதன், நாக சிற்பங்கள், யானைகள் சண்டையிடும் காட்சி, மற்றும் பிற நிகழ்வுகளும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
தூணின் மேல்பகுதி, கோவில் விமானத்தின் மேலடுக்கில் காணப்படும் சிகரம் மற்றும் கலசம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அடுக்கைச் சுற்றியும் வடிவியல் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த வழிபாட்டுத் தூண் கல்லில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களில் மனித உருவங்கள் மற்றும் கால்நடைச் சமூகத்தின் வாழ்வியலை வெளிப்படுத்தும் காட்சிகள் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன.
Inscription
No
Period / King
Approx. 400 yrs old
Additional Information
On all four sides of this worship pillar stone, it is divided into six tiers, and sculpted reliefs are carved within them. Each tier on every side depicts multiple scenes. Notable scenes include: Venugopalar play flute in between teh cattles, a man attacking a pig-like animal with a long weapon, women standing in a row with bows, quivers, and flowers, bulls fighting, armed men in combat, a man stamping his leg on a Shiva lingam to recall the story of Kannappa Nayanar, serpent sculptures, elephants fighting, and other events, all represented as sculpted reliefs.
The upper part of the pillar has a structure resembling the temple’s vimana with a shikhara and kalasam. Each tier features finely carved reliefs, and ornamental designs surround each tier. The sculpted reliefs on this worship pillar stone depict human figures and scenes illustrating the life and culture of the livestock-raising society.