Near the northern bank of Manjal river, located to the south of the town.
Significance of the temple
The only Shiva temple located on the northern bank of Manjal river
Name of the Chief deity
Thirukkalahastheeswarar
Village Name
Genguvarpatti
District
Theni
தல மரம்
வில்வம்
கோயில் குளம்/ஆறு
மஞ்சளாறு
ஆகமம்
சைவ கோயில் ஆகமம்
திருவிழாக்கள் விவரங்கள்
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை, ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் சிவனுக்கு உகந்த நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இப்பொழுது இக்கோயில் பூட்டி இருப்பதால் திருவிழாக்கள் நடைபெறுவதில்லை.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 12 -13ஆம் நூற்றாண்டு, பிற்காலப் பாண்டியர் காலம்
கல்வெட்டு / செப்பேடு
மூன்று கல்வெட்டுகள் உள்ளன.
சிற்பங்கள்
முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் பிரம்மா சிற்பங்கள் உள்ளன
கோயில் அமைப்பு
விமானமும் கோபுரமும் இல்லை. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியன உள்ளன.
சுருக்கம்
திருக்காளகஸ்தீஸ்வரர் என்ற ’ஞானம்மன் கோயில்’ மஞ்சளாற்றின் வடகரையில் அமையப்பெற்ற ஒரே சிவன் கோயில் ஆகும். கோயிலின் வெளியில் பலிபீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. முழுமையாகக் கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் பொது ஆண்டு 12 -13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டிய மன்னர்கள் கட்டியதாக இருக்கலாம். இங்குக் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றில் விநாயகர், முருகன் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலில் உள்ள எல்லாக் கோட்டசிற்பங்களும், அரைத்தூண்களும், தூண் சிற்பங்களும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. இங்கு மூன்று தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலைச்சுற்றி சிதறிக்கிடக்கும் கற்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கிருந்த விமானம் இடிந்து விழுந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.
Temple Tree
Bael tree
Temple Pond/River
Manjal river
Agama
Saiva Agamam
Festivals details
Worship services are held every week on Friday. Additionally, special worship is held on each month's New moon day, Full moon day, and other auspicious days dedicated to god Shiva. Currently, the temple is closed, so festivals are not being held.
Inscription / Copper
Three inscriptions have been identified in this temple.
Sculptures
The temple has sculptures of Murugan, Vinayagar, Dakshinamurthi, and Brahma.
Architecture
The temple consists only of the sanctum (garbhagriha) , ardha mandapam, and maha mandapam, without a vimana or gopuram (Gateway- tower).
Summary
The "Gnanamman Temple" known as Thirukkalahastheeswarar temple is the only Shiva temple located on the northern bank of Manjal river. The temple has an altar and a Nandi mandapam outside. Built entirely from stone, this temple is believed to have been constructed by the later Pandya kings during the 12th-13th centuries. Inside the temple, sculptures of Vinayagar and Murugan are found in the sanctum (garbhagriha), ardha mandapam, and maha mandapam.
Additional Information
The sculptures in the niche, pillasters, and pillars in this temple are very finely carved. Three Tamil inscriptions can be found here. An examination of the scattered stones around the temple suggests that the vimana likely collapsed and fell from its original position.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
Details
Dr.C.Manickaraj
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
காமாட்சி அம்மன் கோயில், பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில், பெரியகுளம் சிவன் கோயில், பெருமாள் கோயில்