It is located on the right side of Valanthur, on the way from Karumathur to Usilampatti.
Name of the Chief deity
Angala Parameswari
Village Name
Valanthur
District
Madurai
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி, மாசி, மார்கழி, புரட்டாசி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தேங்காய் பழம் படைத்து அபிசேகம் செய்வது உண்டு. பொங்கல் வைத்தல், சேவல் மற்றும் கிடாய் வெட்டு, அம்மனைத் தாலாட்டித் தூங்க வைக்கும் சடங்கு ஆகியன செய்யப்படுகின்றன. அப்போது துந்துபி வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையான கோயிலாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
கோவிலைச் சுற்றிலும் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எட்டு கைகளுடைய அய்யனார் சிற்பம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் அய்யனார் முறுக்குமீசை மற்றும் விரிசடையுடன் காட்சியளிக்கிறார். இவர் வில், அம்புகள், கேடையம், சங்கு போன்றவற்றை கைகளில் ஏந்தியுள்ளார்.
கோயில் அமைப்பு
கோபுரம், சந்நிதிகள், மண்டபங்கள் உண்டு
சுருக்கம்
அண்மையில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ள இக்கோயில், ஊர்ப் பொதுத் தெய்வமாக வணங்கப்படுகிறது. குலக்குடிகளின் வம்சாவளிகள் வணங்கி வருகின்றனர். இங்கு மாசிப்பச்சை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் பொங்கல் வைக்கப்படுகிறது. இக்கோயிலைக் குல தெய்வமாக வழிபடுபவர்கள், பிறந்த குழந்தைக்கு இங்கு முதல் மொட்டை போட்டு, காது குத்தி, கிடாய் வெட்டிக் கொண்டாடுவதும் உண்டு. கோபுரம் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது. பரிவாரத் தெய்வங்கள் 18 பங்காளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Festivals details
Festivals are celebrated in the tamil months of Aadi, Maasi, Margazhi, Purattasi.
Rituals of worship / Methods
Coconuts, fruits, pongal (a South Indian dish typically made with cooked rice), goats and roosters sacrifice are offered to the deity and ritualistic purification (abhishekam) of the deity is performed.
Sculptures
Sculptures are placed all around the temple. Specifically the Ayyanar sculpture with eight arms has been intricately carved. In this depiction Ayyanar has been portrayed with a curled moustache and flowing hair. He is holding weapons like bow, arrow, shield, conch, etc.
Architecture
There are a gopurams (gateway towers), shrines, and mandapams in the temple.
Summary
The chief deity, of this recently renovated temple, is worshipped as the village's guardian deity. This temple is an ancestral temple for many clans and the descendants of those clans still worship here. The festival of Maasi Pachai is celebrated with great fervor. Pongal offerings are made during the months of Purattasi, Margazhi, and Panguni. Clan members have the practice of performing the first tonsuring ceremony and ear piercing at this temple, followed by goats sacrifice for their ancestral deity. The gateway towers are built impressively. The accompanying deities of this temple belong to 18 different clans.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
Details
Dr. N. Rathnakumar
செல்லும் வழி
மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் வாலாந்தூரின் வலப்பக்கம் உள்ளது
Directions
It is located on the right side of Valandhur en route from Madurai to Usilampatti.