Worship services are conducted on Tuesdays and Fridays.
Village Name
Valanthur
District
Madurai
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி, மார்கழி, மாசி, பங்குனி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பெருமாள் கோயிலில் அபிசேகம் நடைபெறுகிறது. மற்ற இரண்டு கோயில்களில் மொட்டை போடுவதும், கிடாய் வெட்டுவதும் நடைபெறுகிறது.
காலம்/ ஆட்சியர்
பெருமாள் கோயில் 300 ஆண்டு பழைமையைானதாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
இவ்விடத்தின் அருகில் ஒரு பீடத்தின்மேல் ஏழுகன்னிமார் சிற்பமும் வைக்கப்பட்டுள்ளது.
சுருக்கம்
இவ்வூரில் அருகருகில் மூன்று சிறு கோயில்கள் உள்ளன.
1. பெருமாள் கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம் ஆகியன உள்ளன. கருவறையின் மேல் விமானம் இல்லாமல் முகப்புடன் காணப்படுகிறது. கருவறையில் பெருமாளுடன் அவரது இரண்டு தேவியரும் இருக்கின்றனர். இக்கோயிலில் வெள்ளிதோறும் சிறப்புப் பூசை நடைபெறுகிறது.
2. மாரநாடு கருப்பு சாமி கோயிலில் உள்ள கருப்புசாமி சக்தியான தெய்வமாக மக்களால் கருதப்படுகிறார். இக்கோயிலில் கிடாய் வெட்டு உண்டு.
3. வீரமரணமுற்ற ஆண்களைப் ’பட்டவன்' சாமியாக வணங்குவது போல, வீர செயல் புறிந்து மாண்ட பெண்களைச் ’சீலைக்காரியம்மன்’ தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். இக்கோயிலில் மாசிப்பச்சைக்குப் பல்வேறு பொருட்களை வாங்கி வந்து, சாமியின் பெயரில் ஏலம் விட்டு, இலாபப் பணத்தைச் சாமியைப் பராமரிக்கப் பயன்படுத்திக் கொள்கின்ற வழக்கம் உள்ளது.
Festivals details
The tamil months of Aadi, Margazhi, Maasi, and Panguni are celebrated with special worship. Shivaratri day is celebrated in a grand manner.
Rituals of worship / Methods
Ritualistic purification (Abhishekam) is performed at the Perumal Temple. In the other two temples, worship in the form of ritual tonsuring / head shaving (mottai) and goat sacrifices are performed.
Sculptures
A sculpture of the Seven Virgin goddess (Kannimars) is placed on a pedestal.
Summary
There are three small temples located close to each other in this village.
1. Perumal Temple consists of a sanctum (garbhagriha), an ardha mandapa, and a mukha mandapa. This small temple has been built with a front facade but without a vimana above it. Inside the sanctum, Perumal is present along with his two consorts. Special worship services are conducted in this temple every Friday.
2. Maranadu Karuppu Sami Temple is dedicated to a guardian deity, who is regarded as a powerful deity by the local people. The practice of goat sacrifice is prevalent in this temple.
3. According to folk customs, men who die a heroic death are deified and worshipped as "Pattavan Sami", while women who die performing heroic acts worshipped as "Seilaikaari Amman". At this temple, during the Maasi pachai festival, it is customary for devotees to buy various items and auction them in the name of the deity. The profits obtained from this auction are used for the upkeep of the temple and the deity.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
Details
Dr. N. Rathnakumar
செல்லும் வழி
மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் வாலாந்தூரின் இடப்புறம் மூன்று கோயில்களும் உள்ளன
Directions
These three temples are located to the left of Valanthur, on the way from Madurai to Usilampatti.