பிற தெய்வத்தின் பெயர்கள்
தெய்வானை, துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள், சிவபெருமான்
அமைவிடம்
திருப்பரங்குன்றம் மலையின் வடக்குப் புறத்தில் அடிவாரத்தில் உள்ளது.
தலத்தின் சிறப்பு
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இங்குச் சூரசம்காரம் நிகழ்ச்சியின் போது முருகப்பெருமான் ஆவுடைநாயகி அம்பாளிடம் திருக்கை வேல் வாங்கும் நிகழ்ச்சி சிறப்பான ஒன்றாகும். கோயிலில் வெண்ணெய் சிறு உருண்டைகளாகத் திரட்டி விற்கப்படும். அவ்வெண்ணெய் உருண்டைகளை வாங்கிக் கோயிலிலுள்ள மிகப் பெரிய நந்தி சிலை மீது மனத்தில் வேண்டுதல்களோடு பக்தர்கள் எறிவார்கள். வெண்ணெய் உருண்டை நந்தியின் மேல் ஒட்டிக் கொண்டால், நினைத்தது நடக்கும் என்று வழிவழியாய் நம்பப்பட்டு வருகிறது.கோயில் பகுதியில் பசுமடமும் வேதபாடசாலையும் மயில்களின் காப்பகமும். செயல்படுகின்றன.
ஊர்
திருப்பரங்குன்றம்
மாவட்டம்
மதுரை