கோயில் அமைப்பு
இக்கோயிலில் ராஜகோபுரத்தை அடுத்து நூறு கால் மண்டம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியன உள்ளன. ஆடி வீதியில் சரஸ்வதி, மகாலட்சுமி சந்நிதி, நவக்கிரகங்கள், மேற்குத்திசையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசபெருமாள், வடக்கில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி, துர்க்காதேவி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரி அம்மன் என ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.