It is located in Tiruchuzhi, on the main road from Aruppukottai to Narikkudi.
Name of the Chief deity
Mariamman
Temple Pond/River
Sokku Amman Temple Pond
Village Name
Tiruchuli
District
Virudhunagar
பூசைக்காலம்
காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் நந்தி பூசணி பலி, ஆடுபலி, அம்பாள் ஊர்வலம், அன்னதானம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வழிபாட்டில் மஞ்சள், பால், திரவியப் பொடி, இளநீர், சர்க்கரை, நெய், தயிர், பழங்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. தெய்வத்தின் கழுத்திற்கு மல்லி, முல்லை, பிச்சி ஆகிய பூமாலைகளும், தலைக்குக் கதம்ப மாலையும் சூட்டப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொதுஆண்டு 17ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
மூலவர் மற்றும் நந்தி சிலைகள்.
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் முன்மண்டபம் மட்டும் கொண்ட கோயில். கருவறைக்கு வெளியில் நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியன உள்ளன.
சுருக்கம்
திருச்சுழி மாரியம்மன் கோயில் இப்பகுதி மக்களிடையே மிகுந்த புகழ் பெற்ற கோயிலாகத் திகழ்கிறது. இக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக இப்பகுதி மக்களால் கருதப்படுகிறது. மேலும் இக்கோயில் வளாகத்தில் ஒரு சிறிய சூலக்கல் உள்ளது. சூலத்தின் இருபுறமும் சூரிய சந்திரன் காட்டப்பட்டுள்ளன. இக்கல்லின் இருபுறமும் உள்ள நாகர் உருவங்கள் மண்ணில் புதைந்து காணப்படுகின்றன. இதுவும் தோராயமாக 300 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு ’சக்தி கிடாய்’ என்று அழைக்கப்படும் செம்மறி ஆடு பலியிடப்படுகிறது. இக்கோயிலில் மாசிப் பொங்கல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நந்தி பூசணி பலி, ஆடுபலி, அம்பாள் ஊர்வலம், அன்னதானம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
Worship Timings
Worship takes place from 6:00 AM to 11:00 AM in the morning, and from 4:00 PM to 8:00 PM in the evening.
Festivals details
A 10-day temple festival is celebrated in the Tamil month of Maasi. Events include Nandi Poosani sacrifice, goat sacrifice, Amman's procession, and Annadanam (food offering).
Rituals of worship / Methods
In worship, 21 types of abhishekams are performed using turmeric, milk, powdered herbs, tender coconut water, sugar, ghee, curd, fruits, and Panchamirtham. Garland necklaces made of jasmine, mullai flowers, and pitchi are placed on the deity's neck, and a kadamba flower garland is placed on the head.
Inscription / Copper
No
Sculptures
Moolavar (main deity) and Nandi sculptures.
Architecture
A temple with only a sanctum and front mandapam. Outside the sanctum are Nandi, flagstaff, and sacrificial altar.
Summary
The Thiruchuzhi Mariamman Temple is highly revered by the local people of this region. It is believed by them to have originated around 300 years ago. Within the temple premises, there is a small trident stone. On either side of the trident, the sun and moon are depicted. The serpent figures on both sides of this stone are partially buried in the ground. This stone is also believed to be roughly 300 years old. A male goat, known as "Sakthi Kidai," is offered as a sacrifice at this temple. The festival of Maasi Pongal is celebrated here with great enthusiasm, featuring rituals such as Nandi Pusani sacrifice, goat sacrifice, a procession of the goddess, and food offerings.
தகவல்
முனைவர் செல்லப்பாண்டியன்
Details
Dr. C. Chellapandian
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சுழிகை சொக்கு அம்மன் கோயில்
Nearby Monuments
Suzhikai Chokku Amman Temple
செல்லும் வழி
அருப்புக்கோட்டையில் இருந்து நரிக்குடி செல்லும் முதன்மைச் சாலையில் 15ஆவது கிலோ மீட்டரில் திருச்சுழியில் இக்கோயில் அமைந்துள்ளது.
Directions
On the main road from Aruppukottai to Narikkudi, this temple is located at the 15th kilometer mark in Thiruchuzhi.