The anthill soil is revered as Nagathamman and is being worshipped
Village Name
Kanakkanendal
District
Virudhunagar
மூலவர் பெயர்
நாகாத்தம்மன்/நாகம்மா
கோயில் குளம்/ஆறு
ஊர்ப் பொதுக்குளம்
பூசைக்காலம்
காலை 6 மணி முதல் வழிபாடுகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
கார்த்திகையில் ஒரு நாள் பகல் வேளையிலும், ஆடியில் பௌர்ணமி இரவிலும் புற்றுக்கோயில் திருவிழா நடைபெறுகிறது.
புற்றுக்கோயிலிலுள்ள நாகாத்தமனை வழிபடுவதன் மூலம் பிள்ளைப்பேறு, நினைத்த காரியம் நிறைவேறுதல் மற்றும் நல்ல விளைச்சல் ஏற்படும் என இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பால்குடம், முளைப்பாரி, அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், அன்னதானம் அளித்தல் போன்ற நேர்த்திக்கடன் முறைகள் வழக்கத்தில் உள்ளன. திருவிழாவின் போது காப்புக்கட்டி நோன்பு இருந்து இறைச்சி உண்ணாமல் பக்தியோடு இருக்கின்றனர். எனவே, இங்குப் பலியிடும் வழக்கம் இல்லை.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 2018
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தல வரலாறு / கதைகள்
அரசு ஆணையின்படி கருவேல மரங்களை அகற்றும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும், அப்போது இந்தப் புற்று தெரிய வந்ததாகவும் இக்கோயில் நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஊர் மக்கள், இப்புற்று அமைந்துள்ள இடத்தில் இரும்புக்கூரை அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கோயில் அமைப்பு
புற்றைச் சுற்றி இரும்புக் கூரை அமைப்பு உள்ளது,
கூடுதல் விவரங்கள்
புற்று நாகாத்தம்மன் கோயில் நிர்வாகிகள், நாள்தோறும் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். புற்றின் முன்பு நாகர் சிலைகளும் அம்மன் உலோகச் சிலைகளும் வைத்து வழிபடுகின்றனர்.
Name of the Chief deity
Nagathamman/Nagamma
Temple Pond/River
Village common Tank
Worship Timings
Worship rituals begin at 6 a.m.
Festivals details
The Putru Temple festival is held during the daytime on one day in the month of Karthigai, and on the full moon night (Pournami) in the month of Aadi.
Rituals of worship / Methods
Offerings of thanksgiving (nerthikadan) such as carrying milk pots (paalkudam), sprouted grains (mulaipari), piercing of the cheeks or tongue (alugu kuthuthal), carrying fire pots (theechatti), and providing free meals (annadhanam) are commonly practiced. During the festival, devotees observe vows with kappu (sacred thread), fast, abstain from eating meat, and remain devoted. Therefore, animal sacrifice is not practiced here.
Inscription / Copper
No
Architecture
An iron-roofed structure has been built around the anthill
Additional Information
The administrators of the Putru Nagathamman Temple conduct daily worship. In front of the anthill, serpent idols (Nāgar statues) and metal idols of the goddess are placed and worshipped
தகவல்
முனைவர் செல்லப்பாண்டியன்
Details
Dr. C. Chellapandian
செல்லும் வழி
காரியாபட்டியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் பிரதானச் சாலையில் வக்கணாங்குண்டு அருகே உள்ளது.
Directions
It is located near Vakkanangundu on the main road from Kariyapatti to Aruppukottai