Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

அமுதலிங்கேஸ்வரர் கோயில்

Amudhalingeswarar Temple

கோயிலின் வேறு பெயர்

லிங்கேஸ்வரர் கோயில், ஆனந்த மீனாட்சி சமேத ஸ்ரீ அமுதலிங்கேஸ்வரர்.


பிற தெய்வத்தின் பெயர்கள்

பார்வதி


மூலவர் பெயர்

அமுதலிங்கேஸ்வரர்


ஊர்

கல்குறிச்சி

மாவட்டம்

விருதுநகர்

கோயில் குளம்/ஆறு
கோயில் குளம்
பூசைக்காலம்
காலை 08.00 முதல் 10.30, மாலை 06.00 முதல் 08.00 மணி வரை வழிபாடு நடைபெறும். இங்கு இருகால பூசை நடைபெற்று வருகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஒரு நாள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு மாதமும் பிரதோசம், அமாவாசை, பௌர்ணமி வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும் சிவராத்திரி, திருக்கல்யாணம் போன்ற வைபவங்கள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வில்வ மாலை, பூ மாலைகள், தேங்காய், பழம், வாசனை திரவியங்கள், நெய்வேத்தியம் செய்வது, பொங்கல் இட்டு பூசைகள் செய்வது போன்ற வழிபாட்டு சடங்குகள் பின்பற்றப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு, பாண்டியர் காலம்
கல்வெட்டு / செப்பேடு
இங்கு உள்ள ஒரு தனிக்கல்லில் இக்கோயிலுக்கு தானம் வழங்கப்பட்ட செய்தி வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டு முற்றிலும் சிதைந்துள்ளதால் (எழுத்துக்கள் தேய்ந்துள்ளன) சரியாக படிக்க முடியவில்லை. கல்வெட்டின் எழுத்து அமைதியின் அடிப்படையில் இது பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
சிற்பங்கள்
நந்தி, விநாயகர், நாகர், காலபைரவர், சாஸ்தா போன்ற சிலைகள் மற்றும் தேய்ந்த நிலையில் பழைய சிலை ஒன்றும் இக்கோயில் வளாகத்தில் உள்ளது.
கோயில் அமைப்பு
கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், நந்திமண்டபம் போன்றவையுடன் சுற்றுச்சுவரோடு கோயில் அமைந்துள்ளது.
சுருக்கம்
ஆனந்த மீனாட்சி சமேத அமுதலிங்கேஸ்வரர் ஒரு சிவன் கோயிலாகும். பழங்கால எச்சங்களாக தற்போதும் இக்கோயிலில் லிங்கம், நந்தி மற்றும் விஷ்ணு சிற்பங்கள் காணப்படுகின்றன. இச்சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது, இக்கோயில் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு பிற்கால பாண்டியர் காலத்தில் இக்கோயில் முதன்முதலில் எழுப்பப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பாண்டியர் காலத்திலிருந்து பல்வேறு ஆட்சி மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் இக்கோயில் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கூடுதல் விவரங்கள்
கல்குறிச்சி கிராம பொதுமக்கள் பொது ஆண்டு 2008 ஆம் வருடம் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளனர். அதன் பிறகு அன்றாடம் இருகால பூசை நடைபெற்று வருகிறது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
விநாயகர் கோயில்
செல்லும் வழி
காரியாபட்டியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கல்குறிச்சி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருப்புக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
கல்குறிச்சி, காரியாபட்டி.
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.