செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ( மாலையில்) வழிபாடு நடைபெறும். இது தவிர வெளியூரிலிருந்து வழிபாடு செய்ய மக்கள் வரும்போது, பூஜை நடைபெறும். இது தவிர பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று மாலையில் சிறப்பு பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி மாத களரி முக்கியமான திருவிழாவாகும். முன்பு இகோயிலில் 16 நாட்கள் திருவிழா நடைபெற்று வந்துள்ளது தற்போது 5 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஆடு மற்றும் கோழி பலியிடுதல், வேல் குத்துதல், மணி எடுத்து வைத்தல், விளக்கு எடுத்து வைத்தல், முடி காணிக்கைச் செலுத்துதல், கரும்பு தொட்டிலில் குழந்தை கொண்டு வருதல், குதிரை எடுப்பு உள்ளிட்டவை முக்கியமான வழிபாட்டுச் சடங்குகள் ஆகும்.
காலம்/ ஆட்சியர்
மதுரை நாயக்கர் காலமாக இருக்கலாம்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
இங்கு பல அண்மைக்கால சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் வனதேவதை எனப்படும் அம்மன் சிலையும் ஒன்று.
தல வரலாறு / கதைகள்
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சுழி குண்டாற்றிலிருந்து தண்ணீரில் ஒரு சிலை அடித்து வரப்பட்டுள்ளது. அது ஒரு மண் சிலையாகும். இவ்வூர் மக்கள்அந்த சிலையை எடுத்து வைத்து வழிபட்டு வந்துள்ளனர். அந்த சிலை குருநாதன் சாமி என அழைக்கப்பட்டு வந்துள்ளது. அப்பொழுது இப்பகுதிக்கு வந்த திருமலை நாயக்கர், இவ்வூர் மக்கள் மண்ணால் ஆன சிலையை வழிபடுவதை பார்த்து, அதை மாற்றி கல்லாலான சிலை அமைத்துக் கொடுத்துள்ளார். ஆனால் அச்சிலை தற்போது இக்கோயிலில் இல்லை.
கோயில் அமைப்பு
மூலவர் சந்நிதி மற்றும் பிற தெய்வ சந்நிதிகளும் உள்ளன.
சுருக்கம்
இந்த கோயில் வளாகத்தில் மூலவர் சந்நிதி நடுவிலும் அதன் இருபுறமும் வரிசையாக பிற சந்நிதிகளும் உள்ளன. இதைத் தவிர, இவ்வளாகத்தில் பல சிறிய பீடங்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் கனசதுர வடிவ தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளன. பலகாலமாக வழிபட்டு வரும் குருநாதன் சுவாமியைத் தொடர்ந்து 21 பரிவார தெய்வங்கள் இவ்வளாகத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்றான சுடலைமாடன் சாமியை கல்லால் பீடம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். முற்காலத்தில் இக்கோயில் மணல் மற்றும் செங்கல் கட்டிடமாக இருந்தது. பின்பு அவை இடிக்கப்பட்டு நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலில் சுடலைமாட சாமி பரிவார தெய்வங்களில் ஒன்றாக இருந்தாலும், மற்ற தெய்வங்களுக்குப் பூசைகள் தொடங்குவதற்கு முன்பு சுடலை மாடனுக்கு பலி கொடுத்து பூசை செய்த பின்பே திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளைத் தொடங்குகின்றனர்.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் ஊர் பொதுக் கோயிலாகும். பனையூரைச் சுற்றியுள்ள 21 கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட 5 குடும்பத்திற்கும் இது குல தெய்வமாக உள்ளது. இன்று சுமார் 400 குடும்பங்களுக்கு இக்கோயில் குலதெய்வமாக உள்ளது.
Temple Tree
Vembu is worshipped in the temple.
Temple Pond/River
Gundaru is located nearby in the southern part.
Worship Timings
On Tuesdays and Fridays (in the evening), worship is performed. In addition, when people from outside the village come for worship, puja is conducted. Special pujas are also performed in the evening on full moon (Pournami) and new moon (Amavasai) days.
Festivals details
The *Maasi month Kalarith Festival* is the most important festival of this temple. In earlier times, a 16-day festival was celebrated here, but at present, the festival is observed for 5 days.
Rituals of worship / Methods
Goat and chicken sacrifices, spear stabbing, hanging bells, lighting lamps, offering hair locks, bringing a child in a sugarcane cradle, and the horse-carrying procession are important worship rituals.
Inscription / Copper
No
Sculptures
Several recent-period sculptures are found here, among which is an image of a goddess referred to as Vanadevatai (Forest Deity).
Architecture
There is the main deity sanctum and other deity sanctums as well.
Summary
In this temple complex, the main sanctum is at the center, with other shrines lined up on either side. Apart from these, several small pedestals have been installed, on which square-shaped deity idols are placed. Gurunathan Swami, who has been worshipped here for a long time, is accompanied by 21 parivara deities within this complex. Among them, Sudalaimadan Swami is worshipped on a stone pedestal. In earlier times, this temple was built with sand and bricks. Later, those structures were demolished, and the temple was rebuilt in a modern style. Though Sudalaimadan Swami is one among the parivara deities, before commencing rituals for the other deities, offerings are first made to him, and only after that are major events like festivals begun.
Additional Information
This temple is a public village temple. It serves as the clan deity for five specific families in each of the 21 villages surrounding Panaiyur. Today, it is the clan deity for about 400 families.
தகவல்
முனைவர் செல்லப்பாண்டியன்
Details
Dr. C. Chellapandian
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அய்யனார் கோயில், காமாட்சி அம்மன் கோயில்
Nearby Monuments
Ayyanar Temple, Kamatchi Amman Temple
செல்லும் வழி
திருச்சுழியிலிருந்து கமுதி செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் பனையூர் உள்ளது.
Directions
Panaiyur is located 7 kilometers from Tiruchuzhi on the road leading to Kamuthi.