Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சுழிகை சொக்கு அம்மன் கோயில்

Suzhigai Sokku Amman Temple

கோயிலின் வேறு பெயர்

சொக்காத்தாள் கோயில்


பிற தெய்வத்தின் பெயர்கள்

சப்த மாதர், விநாயகர், வீரபத்திரர், பைரவர்


அமைவிடம்

அருப்புக்கோட்டையில் இருந்து நரிக்குடி செல்லும் பிரதான சாலையில், திருச்சுழியில் உள்ளது.


ஊர்

திருச்சுழி

மாவட்டம்

விருதுநகர்

மூலவர் பெயர்
சொக்கு அம்மன்
கோயில் குளம்/ஆறு
கோயில் திருக்குளம் உள்ளது.
பூசைக்காலம்
காலை 06.00-11.00, மாலை 04.00-08.00 வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி அல்லது பங்குனி மாதத்தில் 10 நாள் திருவிழா நடைபெறும். இக்கோயில் திருவிழாவின் போது நந்தி பூசணி பலியிடப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வழிபாட்டில் மஞ்சள், பால், திரவிய பொடி, இளநீர், சர்க்கரை, நெய், தயிர், பழங்கள், பஞ்சாமிர்தம் போன்ற 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. மூலவரான சொக்கு அம்மனின் கழுத்திற்கு மல்லி, முல்லை, பிச்சி போன்ற பூக்களும் சிரசுக்கு கதம்ப மாலைகள் சூட்டப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 10ஆம் நூற்றாண்டு. பாண்டியர் காலம்.
கல்வெட்டு / செப்பேடு
முற்றிலும் தெளிவற்ற நிலையில் அதிட்டானப் பகுதியில் கல்வெட்டு காணப்படுகிறது.
சிற்பங்கள்
சுழிகை சொக்கு அம்மன், சப்த மாதர்கள், விநாயகர், யோக வீரபத்திரர், பைரவர், அரிகண்டம் சிலை, பாவை போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
திருச்சுழியை அழிக்க வந்த காட்டாற்று பெருவெள்ளத்தில் இருந்து மக்களை காக்க வடக்கு முகமாக வீற்றிருந்த சொக்கு அம்மன் கிழக்கு முகமாக திரும்பி சூலத்தை எறிந்து காட்டாற்று வெள்ளத்தை கடல் பாய்ச்சி, கண்மாய்க்கு திருப்பி விட்டு, மக்களை காத்ததால், இவர் ’சுழிகை சொக்கு அம்மன்’ என்று அழைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறார் என்று இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.
கோயில் அமைப்பு
கோபுரம் மற்றும் விமானம் இல்லாமல் கருவறை, அர்த்தமண்டபம் மற்றும் முன் மண்டபம் மட்டும் இடம்பெற்றுள்ளது. கருவறையைச் சுற்றி சந்நிதிகள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் கருவறையில் காணப்படும் சுழிகை சொக்கு அம்மன், திரிசூலம் பிடித்தவாறு பல கரங்களுடன் உக்ரகமாக காட்சியளிக்கிறார். இக்கோயிலின் அருகாமையில் சில கல் தூண்களும், கற்பீடமும் காணப்படுகின்றன. இதன் கட்டுமானத்தையும், இங்கு காணப்படும் சிற்பங்களையும் வைத்து இக்கோயில் முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இக்கோயிலில் கொட்டு, குழவை சத்தம் இல்லாமல் வழிபாடு நடத்தப்படுகிறது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மாரியம்மன் கோயில்
செல்லும் வழி
அருப்புக்கோட்டையில் இருந்து நரிக்குடி செல்லும் பிரதான சாலையில் 15-வது கிலோ மீட்டரில் திருச்சுழியில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
திருச்சுழி
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.