Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மாரியம்மன் கோயில்

Mariamman Temple

பிற தெய்வத்தின் பெயர்கள்

ஜெகதாம்பிகை


அமைவிடம்

சாத்தூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கன்குடியில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

இக்கோயிலில் தற்போது வழிபாடு செய்பவர்களின் குடும்பத்தினரால்/ முன்னோர்களால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டதாக இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.


ஊர்

இருக்கன்குடி

மாவட்டம்

விருதுநகர்

மூலவர் பெயர்
மாரியம்மன்
தல மரம்
வேம்பு
கோயில் குளம்/ஆறு
வைப்பாறு, அர்ஜுனா ஆறு
பூசைக்காலம்
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆறுகாலப் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி மாதம் சுக்கிர வாரத்திலும், தை மாதத்திலும் சிறப்புடைத் திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இக்கோயில் வழிபாட்டு முறைகளில் பலியிடுதல் முக்கிய இடம் வகிக்கிறது. வெள்ளாடு, மாடு, சேவல் போன்ற பலிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இக்கோயிலில் நேர்த்திக் கடன்களாகத் தீச்சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை, ஆடு, மாடு, சேவல் போன்றவற்றை நேர்ந்து விடுதல், முடிக் காணிக்கை, காது குத்துதல், மாவிளக்கு எடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன்களை இப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது
சிற்பங்கள்
பரிவாரத் தெய்வங்களாக வடக்குவாச் செல்வி, வெயில் உகந்த அம்மன், பேச்சியம்மன், முப்பிடாதி அம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர் உள்ளிட்ட 21 பந்தித் தெய்வங்களும், காவல் தெய்வமாகக் கருப்பசாமி போன்ற தெய்வங்களும் இக்கோயிலில் இடம்பெற்றுள்ளன.
தல வரலாறு / கதைகள்
மாரியம்மன் கோயில் தோன்றிய கதை இங்கு இருவிதங்களில் கூறப்படுகின்றது. வைப்பாற்றுக்கும் அர்ஜுனா நதிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் மண்ணில் புதைந்து கிடந்த அம்மன் சிற்பத்தைக் கண்டறிந்து அவ்விடத்தில் சிற்பத்தை நிர்மாணித்து, இப்போது வரை தொடர்ந்து வழிபட்டு வருவதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். மற்றொரு வழக்கின்படி, ஒருமுறை பூசாரியின் மகள் சாணம் பொறுக்கிச் சேகரித்து வரும்போது அக்கூடையை ஓரிடத்தில் வைத்திருக்கின்றாள். பின்னர் மீண்டும் அக்கூடையை அங்கிருந்து எடுக்க முடியாமல் போயிற்று. அவ்விடத்திலேயே மாரியம்மனுக்குக் கோயில் எடுக்கப்பட வேண்டும் என்று அப்பெண்ணுக்கு “அசரீரி' கேட்க அதன்படி இக்கோயில் கட்டப்பட்டதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கோயில் அமைப்பு
கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம், நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம், உள் சுற்றுப் பிரகாரம், வெளிச்சுற்றுப் பிரகாரம் போன்ற அமைப்புகளுடன் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள்
கோயிலின் கருவறை கல்லால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவரான மாரியம்மன்தான் இங்கு உள்ள பழைமையான சிற்பம். கோயில் வளாகத்தைச் சுற்றித் தூண்களூடன் கூடிய நிழற்குடை மண்டபம் அண்மைக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

குறிப்புகள்
விருதுநகர் மாவட்ட வரலாறு, பக்கம் 13-14
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கைலாசநாதர் கோயில் இருக்கன்குடி
செல்லும் வழி
சாத்தூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கன்குடி அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இருக்கன்குடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
சாத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
இருக்கன்குடி
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்