Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

அனுமந்தராய பெருமாள் திருக்கோயில்

Anumantharāya Perumal Temple

கோயிலின் வேறு பெயர்

ராமர் லட்சுமணன் கோயில்


பிற தெய்வத்தின் பெயர்கள்

ராமர், லட்சுமணன், சீதை மற்றும் அனுமான்.


தலத்தின் சிறப்பு

ராமர், லட்சுமணன் மற்றும் சீதை ஆகிய மூவருக்கும் தேனி மாவட்டத்தில் எழுப்பப்பட்ட ஒரே தனிக் கோயில் இதுதான் என சொல்லப்படுகிறது.


ஊர்

வயல்பட்டி,ஸ்ரீ ராமபுரம்

மாவட்டம்

தேனி

மூலவர் பெயர்
அனுமந்தராய பெருமாள்
தல மரம்
இக்கோயிலில் சற்று வித்தியாசமாக சிவனுக்குரிய வில்வம் மரம் தல மரமாக வழிபடப்படுகிறது.
கோயில் குளம்/ஆறு
முல்லையார்
ஆகமம்
வைணவ ஆகமம்
பூசைக்காலம்
தினமும் காலை 6 முதல் 9 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ராமநவமி, அனுமன் ஜெயந்தி போன்ற நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
சிற்பங்கள்
ராமர், லட்சுமணர், சீதை, அனுமன், பள்ளிகொண்ட பெருமாள், கருடன், விநாயகர் மற்றும் நாகர் சிற்பங்கள் காண்ப்படுகின்றன.
கோயில் அமைப்பு
கருவறை, அர்த்தமண்டபம் மற்றும் மகா மண்டப அமைப்பு காணப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
ராமர், லட்சுமணன் மற்றும் சீதை, மூவருமே இந்த வைணவக் கோயிலில் மூலவராக உள்ளனர். இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் பெரும்பாலும் இராமாயணத்தை சார்ந்ததாகவே உள்ளன. எனினும், இங்குள்ள தலமரம் சிவபெருமானுக்கு உகந்த வில்லவமாக உள்ளது. கோயிலின் நுழைவுப் பகுதியில் ஒரு தனி பீடத்தின் மேல் விநாயகர் மற்றும் நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியில் கல் கொடி மரமும் கோயிலுக்கு உள்ளே உலோகக் கொடி மரமும் வைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முகப்பு மற்றும் வெளிப்புற சுவர்களின் மேல் கருடன், ஆஞ்சநேயர், ராமானுஜர், ராமர், லட்சுமனர், சிதை மற்றும் சிம்மங்களின் சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன.

சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த வழிபாட்டுத்தலம், அண்மைக்காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ராமநவமி, அனுமன் ஜெயந்தி போன்ற நாட்கலில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இங்கு நாதஸ்வரம் மற்றும் தவில் போன்ற மங்கள இசையோடு உற்சவ மூர்த்தங்கள் பல்லக்கில் கோயிலை வலம் வருகின்றனர்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 500 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், கண்ணீஸ்வர உடையார் கோயில் மற்றும் தக்ஷிணாமூர்த்தி கோயில்.
செல்லும் வழி
தேனியில் இருந்து அரண்மனை புதூர் வழியாக வீரபாண்டி செல்லும் சாலையிலும் செல்லலாம் அல்லது வீரபாண்டியிலிருந்து அரண்மனை புதூர் செல்லும் சாலையிலும் செல்லலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேனி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
தேனி
புகைப்படங்கள்

முனைவர் சி. மணிக்கராஜ், மு. அகிலன்

முனைவர் சி. மணிக்கராஜ், மு. அகிலன்

முனைவர் சி. மணிக்கராஜ், மு. அகிலன்

முனைவர் சி. மணிக்கராஜ், மு. அகிலன்

முனைவர் சி. மணிக்கராஜ், மு. அகிலன்

காணொலி

முனைவர் சி. மணிக்கராஜ், மு. அகிலன்