நவராத்திரி பண்டிகையின் போது சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு, பிற்கால பாண்டியர் காலம்.
கல்வெட்டு / செப்பேடு
பொது ஆண்டு 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டு ஒன்று கோயிலின் இடது புறத்தில் வைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் வரிசைநாட்டு ஓரோமீஸ்வரம் உடைய நாயனாருக்கு தொண்டைமானார் அணுகிகள் தினந்தோறும் பூசைகள் செய்ய நில தானம் வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. இத்தானத்தை வழங்கியவர் தொண்டைமான் மனைவியான புன்னன் தேவாண்டாள் எனக் கூறப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
கோயில் கருவறையின் வெளிப்புறத்தில் நந்தி சிற்பம் காணப்படுகிறது. கோயிலின் முகப்பு மற்றும் விமான பகுதியில் சிவன், பார்வதி, முருகன், விநாயகர், நந்தி, பூதகணங்கள், பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி போன்ற பல சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
ஓரடுக்கு விமானம், கருவறை, முன் மண்டப மற்றும் மகா மண்டபம் உள்ளன.
சுருக்கம்
பால் வண்ண நாதர் கோயிலில் சிவபெருமான் முதன்மையானக் கடவுளாவார். கோயில் கருவறையில் சிவலிங்கம், விநாயகர் மற்றும் நாகர் சிற்பங்கள் காணப்படுகின்றன. பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டு, பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டு ஒன்று கோயிலின் இடது புறத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஓரோமீஸ்வரம் உடைய நாயனாருக்கு அளிக்கப்பட்ட நிலதானங்கள் பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இங்கு புதுப்பிக்கப்பட்ட கோயில் கட்டிடமே காணப்படுகிறது, எனினும் இந்த வழிபாட்டுத்தலம் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Temple Tree
Pipal tree, vilvam (Indian Bael/Bengal Quince) tree
Temple Pond/River
Vaigai river
Festivals details
Special pujas are performed during the Navaratri festival.
Inscription / Copper
A fragmentary inscription dating back to the 13th century CE is placed on the left side of the temple. The inscription states that a land grant was made to the God Oromiswaramudaiya Nayanar of Varisai Nadu by the followers/relatives of Thondaimanar to perform daily pujas. It is said that the grantor was Punnan Devandal, the wife of Thondaiman.
Sculptures
A Nandi sculpture is found outside the sanctum sanctorum of the temple. Many other stucco sculptures of Shiva, Parvati, Murugan, Vinayaka, Nandi, Bhuthaganas, Brahma, Vishnu, Dakshinamurthy, etc. are found in the facade and vimana of the temple.
Architecture
There are a single-storey vimana, a sanctum, a mukha mandapa and a maha mandapa.
Summary
Lord Siva is the presiding deity of the Pal vanna nathar temple. The sanctum sanctorum of the temple houses sculptures of Sivalinga, Vinayaka and Naga. A fragmentary inscription dating back to the 13th century AD, the later Pandya period, is placed on the left side of the temple. It mentions the land grants given to Oromiswaramudiaya Nayanar. The temple building that is currently visible here has been renovated, although this place of worship is considered to be ancient._x000D_