கோயிலின் வேறு பெயர்
பெருமாள் கோயில்
அமைவிடம்
திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் அமைந்துள்ளது. இந்த இடம் வேதம் மற்றும் தமிழ்ப் பண்டிதர்களுக்கும் குறிப்பிடத்தக்கது.
தலத்தின் சிறப்பு
புனித கங்கை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது, வைகையாறும் தெற்கு நோக்கிப் பாய்வதால் இதைக் கங்கைக்குச் சமமாகச் சிலர் கருதுகின்றனர். வைகையில் நீராடிவிட்டுப் பட்டாபிராமரை வணங்குவது சிறப்பாகும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடக்கும் விழாவிற்கு, விளாமரங்கள் அதிகம் உள்ள இவ்வூரான விளாச்சேரியில் இருந்துதான் நெல் கொண்டு செல்லப்படுகிறது. அதனால் விளாச்சேரி என்று பெயர் பெற்றுள்ளது. விளாச்சேரி வேதம் மற்றும் தமிழ்ப் பண்டிதர்களுக்கும் முக்கிய இடமாகும்.
ஊர்
விளாச்சேரி
மாவட்டம்
மதுரை