Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரர் கோயில்

Azhudha Kanneer Ātria Eeswarar Temple

கோயிலின் வேறு பெயர்

அழகு முத்து சுவாமி கோயில்


பிற தெய்வத்தின் பெயர்கள்

சிவன், பார்வதி, விஷ்ணு


அமைவிடம்

மதுரையிலிருந்து 14 கி.மீ. தொலைவில் விராதனூர் உள்ளது.


ஊர்

விராதனூர்

மாவட்டம்

மதுரை

தலத்தின் சிறப்பு
சிவனும் தாயாரும் நந்தியின் மேல் அமர்ந்த கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கின்றனர்.
மூலவர் பெயர்
சிவன், பார்வதி, விஷ்ணு
ஆகமம்
காமிகாகமம்
பூசைக்காலம்
காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மகா சிவராத்திரி இங்குச் சிறப்பாகக் கொண்டாப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பக்தர்கள் திருமணத்திற்காகவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், மன வலிமை வேண்டியும் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 800 ஆண்டுகள் பழைமையான கோயில்
தல வரலாறு / கதைகள்
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரகோசமங்கை என்ற ஊரில் இருந்து இரண்டு குடும்பங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தங்கள் குல தெய்வமான அழகர்கோயில் பெருமாளைத் தரிசிக்க வந்தனர். வரும் வழியில் விராதனூரில் ஓய்வெடுத்தனர். அங்குள்ள ஆலமரத்தில் தங்கள் குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைத்தனர். எழுந்து பார்த்தபோது தொட்டிலில் குழந்தையைக் காணவில்லை. குழந்தை மரத்தில் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட அவர்கள், “இறைவா! குழந்தையைக் காப்பாற்றுங்கள்” எனக் கூறிக் கதறி அழுதனர். அப்போது இறைவன் அந்த ஊரில் தனக்கு கோயில் எழுப்பி வழிபடச் சொன்னார். இறைவனின் கட்டளைப்படி, நந்தியின் சிலையை நிறுவிக் கோயில் கட்டி வழிபட்டனர். குழந்தையைக் காணாமல் கதறி அழுத போது உதவியதால், இவ்விறைவனுக்கு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரர் என்று பெயர் வந்தது.

விராதனூர் என்ற இவ்வூரைப் பற்றி ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. இராமாயண இதிகாச காலத்தில் இந்திரனின் நடன சபையிலே ரம்பையின் நடனம் நடைபெற்ற போது தும்புருவன் எனும் கந்தருவன் ரம்பையின் நாட்டிய கலைமீது நாட்டம் கொள்ளாமல் ரம்பையின் மீது ஆசை கொண்டதனால் இந்திரன் கோபமுற்றான். எனவே துன்புருவன் விராட ராட்சதனாக அவதரிக்க வேண்டும் என சாபம் கொடுத்தான். தும்புருவனும் அவ்வாறே அடர்ந்த வனம் நிறைந்த இப்பகுதியில் (விராதையம்பதி) அவதரித்து அதை ஆண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
பெரும்பாலான கோயில்களின் நடுப்பகுதியில் மூலவர் சந்நிதி அமைக்கப்படும். ஆனால் இங்கு அது வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. தனி மண்டபத்தில் நந்தியும், கருவறையின் வலப்புறம் பத்திரகாளியும், இடப்புறம் வீரபத்திரரும், அர்த்தமண்டபத்தில் விநாயகரும், முருகனும் உள்ளனர். அக்னிமூலத்தின் தென்கிழக்கு மூலையில் முத்துக்கருப்பண்ணசாமி, ராக்கை, சப்பாணி, காவல்கருப்பு, முனியாண்டி முதலிய கிராமத் தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இவ்வாலயத்தில் இரண்டாவது நிலையில் சரவணப்பெருமாள் அமர்ந்து அருள் பாலிக்கிறார். எனவே இது சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் தலமாக உள்ளது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அருள்மிகு மரகதவல்லி-முக்தீஸ்வரர் திருக்கோயில் தெப்பக்குளம்.
செல்லும் வழி
சிந்தாமணி, பனையூர் வழியாக நெடுங்குளம் செல்லும் பேருந்தில் செல்லலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மத்தியப் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
தங்கும் வசதி
மதுரை நகரில் உள்ளது
புகைப்படங்கள்

முனைவர் பா.ஆத்மநாதன்

முனைவர் பா.ஆத்மநாதன்

முனைவர் பா.ஆத்மநாதன்

முனைவர் பா.ஆத்மநாதன்

முனைவர் பா.ஆத்மநாதன்