பிற தெய்வத்தின் பெயர்கள்
மரகதவல்லி
தலத்தின் சிறப்பு
கோயிலின் மிகப்பெரும் சிறப்பாகக் கூறப்படுவது, அங்கு நிகழும் "சூரிய பூஜை". ஆண்டுக்கு 24 நாட்கள், தினமும் 20 நிமிடங்கள், சூரிய ஒளிக்கதிர்கள் நேராக சிவலிங்கத்தின் மீது விழுந்து, தாள்பணிந்து வணங்குவது போலக் காணப்படுகிறது. இது செப்டம்பர் 19 முதல் 30 வரை மற்றும் மார்ச் 10 முதல் 21 வரை, பத்து நிமிடங்கள் நேரடியாகவும், பிறகு மகா மண்டபத்திலுள்ள மூன்று சதுர துவாரங்கள் வழியாக கதிர்களாக வருவைதையும் பார்ப்பதற்கு பரவசமாக இருக்கும். இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு, இங்கு நவக்கிரக சந்நிதி இல்லை என்பதுதான். எனினும், பக்தர்கள் சிவபெருமானை வணங்கும்போது, நவக்கோளின் வினைகளும் விலகிவிடும் என நம்பப்படுகிறது.
மூலவர் பெயர்
முக்தீஸ்வரர்
ஊர்
வண்டியூர் தெப்பக்குளம்
மாவட்டம்
மதுரை