It is located at the base of Nagamalai, near Kodimangalam, on the road from Madurai to Cholavandan.
Village Name
Kodimangalam
District
Madurai
தலத்தின் சிறப்பு
நாகமலையில் இயற்கையாக உருவான தீர்த்தம் நாகத் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மழைக்காலங்களில் இங்கு நீர் வழிந்தோடும். இம்மலை நாக வடிவில் இருப்பதாலும் நாகத் தேவதைகள் வாழ்ந்த இடமாகக் கருதப்படுவதாலும் இது நாகமலை எனப்படுகிறது. எனவே இந்த நாகேஸ்வரர் கோயில் கேது நாகதோஷப் பரிகாரத் தலமாகவும் கருதப்படுகிறது.
மூலவர் பெயர்
நாகம்மன், நாகேஸ்வரர்
பூசைக்காலம்
காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி அமாவாசை, மாசி சிவராத்திரி, திருக்கார்த்திகை, சங்கராந்தி ஆகியன முக்கியத் திருவிழாக்களாக கொண்டாடப்படுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இவ்விடம் ராகு - கேது தோஷம், நாகத் தோஷம் நீக்கும் பரிகாரத்தலமாக இப்பகுதி மக்களால் வணங்கப்பெற்று வருகிறது. இக்கோயிலில் பெளர்ணமி அன்று நாகம்மனுக்குப் பொங்கல் வைத்துப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பெண்களுக்கு நாகத்தோஷம் நீங்கித் திருமணம், குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வேண்டுதல்களுடன் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
சிற்பங்கள்
இந்நாகத் தீர்த்தத்தில் நாகம்மன், சிவன், கிருஷ்ணன், ஆகாசக் கருப்பண்ணசாமி, நாகலிங்கம் ஆகிய தெய்வங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
இக்கோயிலின் மூலஸ்தானம் என்பது மிகச் சிறிய கோட்டம் போல் அமைக்கப்பட்டு அதில் நாகம்மன் மற்றும் ராக்காயி அம்மன் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோட்டத்தின் கீழ் ஒரு நீர் வெளியேறும் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக நாகதீர்தத்தின் நீர் வெளியேறுவதாக சொல்லப்படுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள பிற தெய்வங்களுக்கு தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
நாகமலையில் உள்ள நாகத் தீர்த்தம் இயற்கையாக உருவான தீர்த்தம் ஆகும். இம்மலையில் நாகங்கள் நிறைய உள்ளதாகவும், நாகத்தீர்த்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களை அவை தீண்டுவதில்லை என்றும், இங்குள்ள தீர்த்த நீர் மூலிகைகளால் நிறைந்தது என்றும் நம்பப்படுகிறது. திருநாகேஸ்வரம், காளகஸ்திக்கு இணையானது இந்த நாகத்தீர்த்தத் தலம் என்றும் இங்குள்ள ஆலய சேவகர்களும் ஊர் மக்களும் தெரிவிக்கின்றனர்.
Significance of the temple
The naturally formed sacred water on Nagamalai is called Nagatirtham. During the rainy season, water flows here. This hill is called Nagamalai because it is shaped like a serpent and is believed to be the abode of serpent deities. Therefore, the Nageswarar Temple is also considered a place for remedies for Ketu Nagadosham.
Name of the Chief deity
Nagaamman, Nageswarar
Worship Timings
Worship is conducted from 6 AM to 7 PM.
Festivals details
Aadi Amavasai, Masi Shivaratri, Thirukarthigai, and Sankranti are celebrated as major festivals.
Rituals of worship / Methods
This place is worshipped by the local people as a site for remedies for Rahu-Ketu dosham and Nagadosham. On full moon days, if devotees offer pongal and perform milk abhishekam for Nagamman, it is believed that women will be relieved of Nagadosham and receive blessings for marriage and children. On Fridays and Tuesdays, devotees from various districts come to this temple to worship with their prayers.
Sculptures
In this Naga Tirtham, the deities present are Nagamman, Shiva, Krishna, Akashakaruppannasami, and Nagalingam.
Architecture
The sanctum sanctorum of this temple is built like a very small fort, housing the idols of Nagamman and Rakkayi Amman. Below the fort, there is a water outlet through which the water of the Nagatheertham is said to flow. Other deities within the temple complex have separate shrines.
Additional Information
The Nagatheertham in Nagamalai is a naturally formed sacred water body. It is believed that many snakes inhabit this hill, yet they do not harm the devotees who come to the Nagatheertham temple. The water in this sacred tank is thought to be enriched with medicinal herbs. The temple servants and local people say that this Nagatheertham site is equivalent in sanctity to Thirunageswaram and Kalakasthi.
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
Details
Dr. B. Athmanathan
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சோழவந்தான் ஜனக மாரியம்மன் கோயில்
Nearby Monuments
Chozhavanthan Janaka Mariamman Temple
செல்லும் வழி
மதுரையிலிருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் கொடிமங்கலத்தின் அருகில் நாகமலையின் அடிவாரத்தில் நாக அம்மன் கோயில் உள்ளது.
Directions
On the road from Madurai to Chozhavanthan, near Kodimangalam, at the base of Nagamalai, there is a Nagamman Temple.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொடிமங்கலம்
Nearby Bus Stand
Kodimangalam
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
Nearby Railway Station
Madurai
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
Nearby Airport
Madurai International Airport
தங்கும் வசதி
மதுரையில் தங்கும் விடுதிகள் நிறைய உள்ளன.
Accommodation Facilities
Accommodation facilities are available in Madurai city.