Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மந்தை முத்தாலம்மன் கோயில்

Manthai Muthālamman Temple

பிற தெய்வத்தின் பெயர்கள்

மலையலங்கார சுவாமிகள், செம்பாயி அம்மன்


தலத்தின் சிறப்பு

திருமணத்தடை நீங்கவும், குழந்தைபாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபடுகின்றனர்.


மூலவர் பெயர்

முத்தாலம்மன்


ஊர்

சிறுகுடி

மாவட்டம்

திண்டுக்கல்

பூசைக்காலம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் செவ்வாய்கிழமையன்று காப்புகட்டுதல் நடைபெறும். இரண்டாவது செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
திருவிழா அன்று காலை முத்தாலம்மனின் மண் சிலை செய்யப்படுகிறது. அச்சிலை கோயிலில் உள்ள பீடத்தில் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. ஊட்டுச்சோறு என்பது இக்கோயில் திருவிழாவின் முக்கிய சடங்காகும். கோயில் பூசாரி 15 நாட்கள் விரதமிருந்து இந்த ஊட்டுச்சோற்றை தயார் செய்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஊட்டுச்சோறு என்பது ஒரு மண்பானையில் பலியிடப்பட்ட கோழியை உப்பில்லாமல் சமைத்து, பூசாரி அம்மனுக்கு ஊட்டுவதாகும். ஊட்டுச்சோறு வந்தவுடன் அம்மனுக்கு ஊர் மக்களின் சார்பாக கிராமத்தின் மந்தையில் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. திருவிழாவின் இறுதியாக மாலையில் அம்மன் சிலை பூஞ்சோலை குளத்தில் கரைக்கப்படுகிறது. அம்மன் பூஞ்சோலைக்கு புறப்படும் காட்சியை மக்கள் குழுமி நின்று கண்டுகளிக்கின்றனர். அம்மனின் சிலையை கோயிலுக்கு அழைத்து வரும் போதும், அம்மன் பூஞ்சோலைக்கு புறப்படும் போதும், பூசாரி அம்மனுக்கு ஊட்டுச்சோறு ஊட்டுகிறார்.
சிற்பங்கள்
முத்தாலம்மன் சிலை திருவிழாவின் போது மட்டும் நிறுவப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
முத்தாலம்மன் அல்லது மந்தை அம்மன் என்ற பெயரில் தென் தமிழகத்தில் பல இடங்களில் கிராம கோயிலாக இந்த நாட்டுப்புற தெய்வம் அமைந்துள்ளது. முத்தாலம்மன் சக்தி மிகுந்த கிராம தெய்வமாக இவ்வூர் மக்களால் கருதப்படுகிறார். முத்தாலம்மனுக்கென தனி கோயில் சிலை எதுவும் கிடையாது. முத்தாலம்மன் கோயில் திருவிழா அன்று காலையில் முத்தாலம்மன் சிலை செய்யப்பட்டு அன்று மாலையே அந்த சிலை அழிக்கப்படுகிறது. அன்றே பிறந்து அன்றே அழியும் அம்மனாக முத்தாலம்மன் விளங்குவதால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி இந்த திருவிழாவை நடத்துவது வழக்கம்.
காலம்/ ஆட்சியர்
திருமலை நாயக்கர் காலம்
தல வரலாறு / கதைகள்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை அரசாட்சி செய்து வந்த மாமன்னர் திருமலை நாயக்கரின் பிரதிநிதியாக இருந்து, நத்தத்தை தலைநகராக்கி ஆட்சி செலுத்திய சருகு துந்துமி லிங்கமநாயக்கரின் முயற்சியால் சிறுகுடி என்ற இவ்வூரில், அய்யனார் மலையில், மணக்கோலத்தில் மலையலங்கார சுவாமியும் செம்பாயி அம்மனும் மற்றும் பரிவார தெய்வங்களும் மண்ணால் செய்யப்பட்டு வழிபடப்பட்டன. அவர் அக்கோயிலின் செலவுகளுக்காக நிலபுலன்களை மானியம் கொடுத்து திருப்பணியை நிறைவேற்றினார் என்றும் சொல்லப்படுகிறது.
தகவல்

முனைவர் முத்தையா

அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிறுகுடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
புகைப்படங்கள்

மூ. சேகர்

மூ. சேகர்

மூ. சேகர்

காணொலி

மூ. சேகர்

மூ. சேகர்