கோயிலின் வேறு பெயர்
மந்தையம்மன் கோயில்
அமைவிடம்
காவனூர் ஊர் மந்தை
மூலவர் பெயர்
முத்தாலம்மன்
ஊர்
காவனூர்
மாவட்டம்
மதுரை
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வழிபாடு நடைபெறும்.
முத்தாலம்மன் கோயில் திருவிழா அன்று காலையில் முத்தாலம்மன் சிலை செய்யப்பட்டு மாலையில் அந்த சிலை அழிக்கப்படுகிறது.
ஊர் மந்தையில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பில் பீடம் மட்டும் காணப்படுகிறது. மண்டபத்தின் மேல் பகுதியில் பூதகணங்கள், நந்தி மற்றும் பிற உருவ சிற்பங்களைக் கொண்ட கோயில் விமானம் போன்ற அமைப்பு உள்ளது.
முத்தாலம்மன் அல்லது மந்தை அம்மன் என்ற பெயரில் தென் தமிழகத்தில் பல இடங்களில் கிராம கோயிலாக இந்த நாட்டுப்புற தெய்வம் அமைந்துள்ளது. முத்தாலம்மன் சக்தி மிகுந்த கிராம தெய்வமாக இவ்வூர் மக்களால் கருதப்படுகிறார். நோய் நொடி தீர, குழந்தை பாக்கியம் பெற முத்தாலம்மனுக்கு வேண்டுதல் வைக்கின்றனர்.
முத்தாலம்மனுக்கென தனி கோயில் சிலை எதுவும் கிடையாது. முத்தாலம்மன் கோயில் திருவிழா அன்று காலையில் முத்தாலம்மன் சிலை செய்யப்பட்டு அன்று மாலையே அந்த சிலை அழிக்கப்படுகிறது. அன்றே பிறந்து அன்றே அழியும் அம்மனாக முத்தாலம்மன் விளங்குவதால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி இந்த திருவிழாவை நடத்துவது வழக்கம்.
முனைவர் துர்கா தேவி
விநாயகர் கோயில்
காஞ்சரம் பேட்டை பேருந்து நிலையம்
மதுரை ரயில்வே நிலையம்
மதுரை விமான நிலையம்